புதுக்கோட்டை, ஜூலை 19 - தான்சானியா நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக, அந்நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் குறைந்த தண்ணீர், குறைந்த விதையைக் கொண்டு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பத்தை பெரும்பாலான விவசாயிகள் கையாளத் தொடங்கிவிட்டனர். இத்த கைய திருந்திய நெல் சாகுபடி முறை யைக் கற்றுக் கொள்வதற்காக தான்சானியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் பில்லாரோ, டிராக்சா மிராஜூ, பாபியாலா லாங்கா, காசனேனே, டேனியல் டாசன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யாவை சந்தித்து பல்வேறு விபரங் களைப் பகிர்ந்து கொண்டனர். இவர்களு டன் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எம்.பெரிய சாமி மற்றும் வேளாண் அலுவலர்களு டன் கலந்துரையாடினர். அப்போது, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத் தை கையாளும் முறைகள், அதன் பயன்கள், இந்த முறையை சிறப்பாக செயல்படுத்தும் விவசாயிகளுக்கு அரசு செய்யும் சலுகைகள், அளிக்கப்படும் விருதுகள் குறித்து வேளாண் அலு வலர்கள் அவர்களிடம் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் தான்சானியா விஞ்ஞானிகளுடன், விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அப்போது, தான்சானியா விஞ்ஞானிகள் பேசுகையில், “தான்சானியா நாட்டில் பிளாஸ்டிக் தடை முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்த முடியாது. எங்கள் நாட்டில் கடும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்தியாவைப் போன்றே தான்சானியாவிலும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படு கின்றன. அதில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை தான்சானியாவில் பின்பற்றினால், நெல் சாகுபடியில் அதிக விளைச்சலை பெறமுடியும் என நம்புகிறோம். இந்தியாவைப் போன்று தான்சானி யாவில், விவசாயத்தில் சாகுபடி முறை களைப் பற்றியோ, இடுபொருள் மற்றும் விளைபொருள் விற்பனையை பற்றியோ எந்த தகவலும் விவசாயிகளுக்கு எளி தில் கிடைப்பதில்லை. இத்தகைய விழிப் புணர்வையும், தொழில்நுட்பங்களை யும் தான்சானியாவல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகமாக சோளம் பயிரிடுகிறோம். அதில், அவ்வளவாக பூச்சி நோய் தாக்குவதில்லை” என்றனர். கூட்டத்தில், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலா முத்து, குழந்தை கள் நலக்குழு தலைவர் கே.சதாசிவம் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா வரவேற்க, எம்.முத்துக்குமார் நன்றி கூறினார்.