tamilnadu

img

தமிழ் மாநில பொதுச்செயலாளர், தேசிய துணைத்தலைவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் - பி.வி.கதிரவன்

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இத ழான ‘‘தீக்கதிர்’’ மக்களின் பிரச்சனைகளை துணிச்ச லோடு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்ற நடுநிலை நாளேடு ஆகும். தீக்கதிரின் பதிப்பகம் சென்னை, மதுரை, கோவை, திருச்சியிலும் தினமும் மக்களின் பிரச்சனை களையும் நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் பதிவிட்டு வருகிறது. தற்பொழுது திருநெல்வேலியில் 5வது பதிப்பகம் திறக்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் தீக்கதிர் நாளிதழ், தற்போது திருநெல் வேலி மற்றும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கி றேன்.