tamilnadu

img

தோழர் ஆர்.ஏ.லட்சுமணராஜா மறைவு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இரங்கல்

 தோழர் ஆர்.ஏ.லட்சுமணராஜா மறைவு  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இரங்கல்

சென்னை, மே 28 - மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ஆர்.ஏ. லட்சுமணராஜா மறைவுக்கு, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சர வணன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத் தில் உழைப்பாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக 50 ஆண்டு காலம் முழுமையாக பழங்குடி மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான போராளி  ஆர்.ஏ.லட்சுமண ராஜா புதனன்று (மே 28) இயற்கை எய்தி னார். அவருக்கு வயது 86. தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் துவங்கிய  காலத்தில் இருந்து,  அதற்கு முன்பாகவே  ஜவ்வாது மலைவாழ் மக்களை, அவர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி பாதுகாத்தவர் தோழர் ஆர்.ஏ.லட்சுமணராஜா. வனத் துறையில் பல்வேறு தாக்குதல்கள், அடக்குமுறைகள், பொய் வழக்கு கள், இதை எல்லாம் எதிர்த்து வீரச்செறிந்த போராட்டங்களை நடத்தியவர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரோ, வருவாய்  அலுவலர்களோ, வனத்துறை சேர்ந்தவர்களோ “தோழர் லட்சு மணராஜா ஒரு பிரச்சனையில் தலையிடுகிறார் என்று சொன் னால் அதில் 100 சதவீதம்  உண்மை இருக்கும்” என்று அதிகாரிகள் அப்படியே அதை நிறைவேற்று வார்கள், நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். பல்வேறு கட்ட போ ராட்டங்களில் கோரிக்கை வெற்றி வெற்றியடையாமல் விடாப்பிடியான போராட்டங் களை நடத்தி சமரசமற்ற போ ராளியாகவும் திகழ்ந்தவர்.  பழங்குடி மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்தவர். ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் சங்கம் துவங்கிய ஆரம்ப  காலகட்டத்தில் தோழர்கள் கோ. வீரய்யன், ஆர்.ராமராஜ் மற்றும் அவரோடு இருந்த கே.ஆர்.எஸ்  பரமசிவம் உள்ளிட்ட தலை வர்கள் எல்லாம் மலைக்கு அழைத்துச் சென்று பழங்குடி மக்கள் வெளியேற்றத்தை முத லிலே தடுத்து நிறுத்திட போராட் டத்தை களம் கண்டவர். தன்னுடைய வாழ்நாளில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அத்தனையும் இந்தப்  பகுதியில் பலமாக கட்டியெ ழுப்பியவர் என்ற பெரிய எண்ணத் தோடு முழுமூச்சோடு கடைசி வரை தொண்டாற்றியவர். திருப்பத் தூர்-வேலூர் மாவட்டத்திற்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்திற்கும் பெரிய பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் மகன், மகள் குடும்பத்தார் அனை வருக்கும் ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துக் கொள் கிறோம். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செங்கொடி தாழ்த்தி வீர அஞ்சலி செலுத்துகின்றோம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.

சமரசமற்ற போராளியாக வாழ்ந்த தோழர் லட்சுமணராஜாவின் உடல் திருப்பத்தூர் வட்டம், ராஜபாளையம் கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செங்கொடி போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநிலச் செயலாளர் சரவணன், மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.  மவுன ஊர்வலம்  ராஜாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகிலிருந்து மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி தலைமையில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தயாநிதி, பி.காத்தவராயன், கே.சாமிநாதன், திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ், விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், தொழிற்சங்கம், வாலிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். மறைந்த தோழர் ஆர்.ஏ.லட்சுமண ராஜாவுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.