tamilnadu

img

சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தில் தமிழக அரசு சலுகை!

சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுக் குடியிருப்புகளில், பொது விளக்கு வசதி, நீர் இறைக்கும் மோட்டார் போன்ற பொதுப் பயன்பாட் டிற்கான மின் கட்டணம், யூனிட் 8 ரூபா யிலிருந்து 5 ரூபாய் 50 காசுகளாக குறைக்  கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மாநகரம் மற்றும் பிற மாநக ராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதி களில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (சிறிய அடுக்குமாடி வீடுகள்) உள்ளன. அண்மை யில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை  ஆணையம், மின் கட்டண முறையை  மாற்றியமைத்த போது, இந்த குடியிருப்பு களின் பொது விளக்கு வசதிகள், நீர்  இறைக்கும் மோட்டார்கள் போன்ற  பொதுப் பயன்பாட்டுப் பணிகளுக்கான மின் கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்பு களுக்கான கட்டண முறைக்கு மாற்றப்  பட்டுள்ளன.

இதனால் பொது மக்களுக் கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக் கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு  குடியிருப்பு நலச் சங்கங்கள் தெரிவித்த தன் அடிப்படையில் இதனை பரிசீலித்து  10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக  3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாக வும் இருக்க கூடிய மின் தூக்கி (லிப்ட்)  இல்லாத அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு பொது பயன்பாட்டுக்கான புதிய  சலுகை கட்டண முறை நடைமுறைப் படுத்தப்படும். இதன்கீழ் பொதுப் பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 1 யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய்  50 காசுகளாக குறையும்.  இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள். சென்னை - நாவலூரில் உள்ள கட்  டண சாவடியில் கட்டணம் வசூலிக்கக்  கூடாது என்ற கோரிக்கை முன்வைக் கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை (அக். 19) முதல் நாவலூர் சுங்கச் சாவடி யிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.