சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத் தலைவராக சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்தது தொடர் பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு தமிழ்நாடு அரசு பதில் அனுப்பி யுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான வர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள், நேர் காணல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளி யிடப்படுகின்றன. ஆனால், கடந்த பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், தேர்வுகள் நடத்தப் பட்டாலும், நேர்காணல் உள்ளிட்ட வற்றை நடத்த முடியாத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தலை வர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பி னர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அரசின் பரிந்து ரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கா மல் சில சந்தேகங்களை எழுப்பி கோப்பு களை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பி னார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலை வராக சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து ஆளுநர் மாளி கைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.