தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியீடு
சென்னை, ஜூன் 3 - தமிழ்நாடு அரசின் நான்காண்டு நிறை வடைந்ததையொட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் துறை வாரியாகத் தொகுத்து, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் ‘தமிழரசு’ சார்பில் நான்காண்டு சாதனை மலர் ஒன்றை தயாரித்துள்ளது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கட்டு ரைகள், ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்கு நர் ரெ.கோமகனின் “மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநர் செல்வ புவியரசனின் “அறம் காக்கும் ஆட்சி”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உள்ளடக்க மேலாண்மை வல்லுநர் ந.செல்லப்பா எழுதிய “ஓர் ஏர் உழவர் காக்கும் அரசு”, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உள்ளடக்க மேலாண்மை வல்லுநர் த.ராஜன் எழுதிய “கல்வி யிற் சிறந்த தமிழ்நாடு” என்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூத்த பத்திரிகையாளர் எம்.ரமேஷ் எழுதிய “தொழில் பெருகும் தமிழ்நாடு”, மதுரை காம ராசர் பல்கலைக்கழகம், பொருள் அளவீட்டியல் துறை, முனைவர் சௌ.புஷ்பராஜ் மற்றும் தி.சு.கி.துர்கேஷ் நந்தினி ஆகியோர் எழுதிய “இந்தியாவின் விடியல் பயணத்தால் வழி காட்டும் தமிழக ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்”, முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மைய இயக்கு நர் பேராசிரியர் இரா.சுப்பிரமணியன் “தமிழ் நாடு உயர் கல்வியில் முதலிடம், அறிவுப் புலத் தின் புகழிடம்” என்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியின் “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு”, வாவ் மீடியா வேர்ல்ட், துணை ஆசிரியர் பி.எம்.சுதீர் எழுதிய “விளையாட்டல்ல நிஜம் கனவுகள் நன வாகின்றன”, மருத்துவர் ப.மீ.யாழினி எழுதிய “எல்லார்க்கும் எல்லாம்: தமிழ்நாட்டின் சுகா தாரப் பெருவழி” ஆகிய கட்டுரைகளும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள், திட்டங் களின் பயன்களும் இம்மலரில் இடம்பெற்று உள்ளன. “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்ட நான்காண்டு சாதனை மலரை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட தொல்.திருமாவளவன், வைகோ, இரா.முத்தரசன், கே.எம். காதர் மொய் தீன், கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.