ஈரோடு, ஜன. 18- விவசாயிகள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் பி.காசியண்ணன் மறை விற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் மாநில பொது செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் விவசாயி கள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் காசியண்ணன் (81). இவர் செவ்வாயன்று இயற்கை எய்தினார். அவரது மறை விற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயி கள் நடத்திய பல்வேறு போராட்டங்க ளில் நேரடியாகப் பங்கேற்று வழிகாட்டி உதவியவர். மாநில அளவில் விவசாயிகள் கூட்டமைப் பின் சார்பில் நடைபெற்ற பல போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றவர். விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பு என்று சொன்னால் மாவட்டத்தில் உடனடியாக ஆதரவு குரல் எழுப்பிய விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கியவர் காசியண்ணன்.
அவரது மறைவு விவசாயிகள் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் அஞ்சலியும், அவரை இழந்து துயருற்று நிற்கும் உறவினர்களுக்கு அனுதா பங்களையும் தெரிவித்துக் கொள்கி றோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, காசியண்ணன் மறைவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்முகம், கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.துரை ராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில துணைத் தலைவர் ப.மாரி முத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, பெருந்துறை தாலுகா செயலாளர் முத்து பழனி சாமி மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோபிநாத் உள்ளிட் டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.