tamilnadu

img

அரோகரா கேட்பார் தமிழ் கடவுள் - காயத்ரி மாணிக்கம்

அரோகரா கேட்பார்  தமிழ் கடவுள்

அச்சம் ஏதுமின்றி அரோகரா கேட்பார் தமிழ் கடவுள்…  திடீ..ரென வந்த பூதகிப்பிள்ளைகளின் காவி சத்தம் அதனூடே என்ன செய்து விடும்…  அபிஷேக ஆராதனை அலங்கார தீபாராதனையில் ஆயிரமாயிரம் பக்தர்களை மலையேறச்செய்து மகிழ்ந்திருக்கும் தமிழ் கடவுளை…  பொய் வணங்கி வேசமிட்டு கோசமிட்டு கவர்ந்திடவா முடியும்…?  வேலுண்டு வினையில்லை தமிழ் கடவுளின்பால் நம்பிக்கையுண்டு…  வடபுரத்து சதிகொண்டு ஆன்மீகம் பூசி அதிகார பலத்துடன் மத[ங்]ம் கொண்டு வந்தென்ன…  ஒருபோதும் இங்கே மா..பாதகம் நடவாது தமிழ் கடவுளின்பால்…  நீ..ண்ட வேல் வாயில் குத்தி காவடி கரம் எடுத்தாடிவரும் அன்பர்களில் அருள் சிலிர்த்து கலந்திருக்கும் தமிழ் கடவுளுக்கு…  உங்கள் கூற்றாகவே தெரியும் தானே பக்தியுருக்கத்தில் மாநாடு இல்லை என்பதும் நரசிந்தனையோடுதான் கூடுகிறீர்கள் என்பதும்…  ஆகவே வேலெடுத்து சூரசம்ஹாரம் செய்தே உண்மையான பக்தகோடிகளின்