tamilnadu

img

அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை மறைவு: கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

 திருப்பூர்,மார்ச் 1 - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனின் தந்தை முத்தூர் சா. பெருமாள்சாமி கவுண்டர் (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவினால் அண்மையில் காலமானார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் வசித்து வந்த அவரது மறைவு செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் கே. காமராஜ்,  மாவட்டச் செயலாளர் செ. முத்துக் கண்ணன், ஒன்றியக் கவுன்சிலர் பி. முத்துசாமி, திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே. கணேசன் ஆகியோர் வியாழனன்று முத்தூருக்குச் சென்று அமைச்சர் சாமிநாதனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தங்களின் இரங்கலைத் தெரி வித்தனர். அப்போது கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணனும், அமைச்சர் சாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு, அவரது தந்தையின் மறை வுக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.