tamilnadu

img

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம்: மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது

தூத்துக்குடி, நவ.2 தமிழ்நாடு உதயமான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாசிலாமணி புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா தலை மை வகித்தார், ஒன்றிய செயலாளர் கே.சங்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. பி.ஆறுமுகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சங்கர லிங்கம் ஆகியோர் கருத் துரை ஆற்றினர். நிறைவாக புறநகர் செயலாளர் பா. ராஜா நன்றியுரை ஆற்றி னார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் , மாவட்ட குழு உறுப்பினர் கள் பலர் கலந்து கொண்ட னர்.