tamilnadu

img

தமிழகத்தையே கான்ட்ராக்ட் எடுத்து அதிமுக ஆட்சியில் கொள்ளை

சென்னை, பிப். 15 - தமிழகத்தையே  எஸ்.பி.வேலுமணி குடும்பத்திற்கு, கான்ட்ராக்ட் கொடுத்திருந்தது அதிமுக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில், தாம்பரம் மாந கராட்சியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் ஆர்.விஜயா (61ஆவது வார்டு), ஜி.விஜயலட்சுமி (28ஆவது வார்டு) ஆகியோருக்கு வாக்கு கேட்டு திங்களன்று (பிப்.14) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: உள்ளாட்சியை ஊழல் மயமாக்கியது அதிமுக. எல்இடி பல்பு மாற்றுவதில் 600 கோடி ரூபாய் ஊழல், மணலுக்கு பதிலாக எம் சாண்ட் கொடுத்து 1000 கோடி ரூபாய் ஊழல் என  ஊரையே முந்தைய உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொள் ளையடித்தார். அவரது  குடும்பத்திற்கு தமிழகத் தையே கான்ட்ராக்ட் கொடு த்தது.

அதிமுக ஆட்சியில், ஊழலில் மூழ்கிய உள்ளாட்சியை மீட்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. குடிமனைப்பட்டா கேட்டு  கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட்  கட்சி ஏராளமான போராட் டங்களை நடத்தியது. இதற்கு மாறாக, ஆக்கிர மிப்பு என்ற பெயரில் தமிழக அரசு வெளியேற்றியது. தற்போது நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் குடியிருப்புகளை அகற்றி இருப்பார்கள். பெத்தேல் நகரில் ஒருபகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு, மறு பகுதி மக்களை வெளியேற்ற சொல்வது என்ன நியாயம்? மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கையின் காரணமாக, நோட்டீஸ் கொடுத்தும் குடியிருப்பு களை அகற்றாமல் உள்ள னர். மக்களை பாதுகாக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது.

நரக வாழ்க்கையிலிருந்து மீண்டு நாகரீக வாழ்வை வாழ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள். தாம்பரம் மாநகராட்சியில் மக்களின் கோரிக்கைகளை எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசி னார். 61ஆவது வார்டு பிரச் சாரத்தில் படப்பை மனோ கரன், லயன் சங்கர் (திமுக), ஆர்.வேல்முருகன், ஜி.செந் தில்குமார், பா.பால கிருஷ்ணன், தா.கிருஷ்ணா (சிபிஎம்), நாராயணன், சகா தேவன் (மதிமுக), சுந்தர்ராஜ்  (காங்கிரஸ்), ரவிச்சந்திரன் (விசிக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 28ஆவது வார்டு பிரச்சாரத்தில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், பல்லாவரம் பகுதிச்  செயலாளர் எம்.சி.பிரபா கரன், எஸ்.நரசிம்மன், திமுக  தலைவர்கள் கே.தனசே கரன், லயன் டி.குமார், ஆர்.காமேஷ், சூசைராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஏ.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.