tamilnadu

img

தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க வலுவான நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, ஜன.12- இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீன வர்களை விடுவிக்க வலுவான நடவ டிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அர சின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்  சங்கருக்கு தமிழ் நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப்  பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த னர். அப்போது, எல்லை தாண்டி மீன்  பிடித்ததாகக் கூறி ஜனவரி 12 ஞாயிற்  றுக்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அந்த மீன வர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீனவர் கள் அடிக்கடி சிறைப்பிடிக்கப்படுவதால், மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை யும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி யுள்ளது. ஆகவே, பாரம்பரிய வாழ்வா தார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கிறது. இதனால், மீனவர்கள் கைது செய்யப்படு வதை தடுப்பதற்கு உரிய தூதரக நட வடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது  செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரை வில் விடுவிக்க வேண்டும். இதற்காக உரிய  தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்  கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.