tamilnadu

img

உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, மே 22 - ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்க ளன்று (மே 22) ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி யுள்ளனர். உணவு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்வோரை, தொழிலா ளர்களாக அங்கீகரிக்க வேண்டும். ஊதியம் வழங்க கொண்டு வரப்பட் டுள்ள புதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறையி லேயே வழங்க வேண்டும், இலக்கை  பூர்த்தி செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊக்கத் தொகை, அனுபவமிக்க விநியோகிப்பாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத் தொகை, டர்ன்ஓவர் ஊக்கத் தொகை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும். பெட்ரோல் 50 ரூபாய் விற்றபோது போக்குவரத்து செலவாக கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் கொடுத்தனர். தற்போதுள்ள நிலையில் அதை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஒரு ஆர்டருக்கு 30 ரூபாயும், அதனோடு சேர்த்து தரப்படும் (பேட்ச்) ஆர்டருக்கு 20 ரூபாயும் வழங்க வேண்டும்.காத்திருப்பு கட்டணத்தை ஆர்டருடன் இணைக்காமல் தனியாக  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத் தின் (சிஐடியு) பொதுச்செயலாளர்  ராமகிருஷ்ணா கூறுகையில், தமிழ் நாடு அரசு எங்களை போன்றவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் நியா யமான கோரிக்கைகளை ஸ்விகி  நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு ஆதரவாக பொது மக்கள் மின்னஞ்சல் வாயிலாக ஸ்விகி நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என கோரினார். தமிழ்நாடு முழுவதும் 90 விழுக்காடு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சுமார் 10 ஆயிரம் ஊழி யர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே, இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரினார்.