tamilnadu

img

நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் நிறுத்தி வைப்பு!கடும் எதிர்ப்பால் ஒன்றிய நிதியமைச்சகம் நடவடிக்கை

நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் நிறுத்தி வைப்பு! கடும் எதிர்ப்பால் ஒன்றிய நிதியமைச்சகம் நடவடிக்கை

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! நிதியமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. நன்றி

சென்னை, மே 30 - நகைக் கடனுக்கான புதிய நிபந்த னைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை 2026 ஜனவரி 1-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கு மாறு ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதி யமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய நிபந்தனைகள் தொடர்பாக, பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளைக் கணக்கில் கொண்டும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்; குறிப்பாக, ரூ. 2 லட்சத்துக்கும் குறை வான நகைக் கடன் பெறும் மக்கள், பாதிக்கப்படாதவாறு, புதிய விதி களில் இருந்து தளர்வு அளித்து, விரைந்து நகைக் கடன்களை வழங்க  வேண்டும் என்றும் ஒன்றிய நிதி யமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கி யுள்ளது.  சாமானிய மக்களுக்கு எதிரான விதிமுறைகள் வங்கிகள் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நடைமுறைகளில் புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.  தங்கத்தின் மதிப்பில் 90 சதவிகிதம் நகைக் கடனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 75 சதவிகிதம் தான் வழங்கப்படும்; அன்றைய தங்கத்தின் விலை அடிப்படையில் அல்லாமல், ஒரு மாத சராசரி மதிப்பைக் கணக்கிட்டே கடன் வழங்கப்படும். புதிய விதிமுறைகளின்படி கடன்  வாங்குபவர்கள் அடமானம் வைக்கப் படும் நகைக்கு, தான் தான் உடமை யாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். ரசீதில் உடமையாளரின் பெயரும் அவரது தந்தையின் பெய ரும் இருக்க வேண்டும். அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறு பவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கைதர வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க நாணயங்கள் அடமானத்தைப் பொறுத்தவரை வங்கிகளில் பெற்ற நாணயங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ஏராளமான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருந்தன.  சு. வெங்கடேசன் எம்.பி. அமைச்சரிடம் முறையீடு பொதுவாக கடனை திருப்பிச் செலுத்திய நாளிலேயே நகை திரும்ப வழங்கப்படும் நிலையில், புதிய விதி யானது, கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்ட 7 வேலை நாட் களுக்குள் அடமானம் செய்யப்பட்ட நகைகளை கடனாளியிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயிகள் சங்கமும் முதன்முதலாக இப்பிரச்சனையை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தன. நிபந்தனைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன், உடனடியாக கடிதம் எழுதியதுடன், ஒன்றிய நிதி யமைச்சரை நேரிலும் சந்தித்து, நகைக் கடன் பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்; புதிய நிபந்தனை களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி, நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  எதிர்ப்பு வலுத்ததால்  இறங்கி வந்த ஒன்றிய அரசு இவ்வாறு, நகைக்கடன் விதிமுறை களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த தைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி யின் தங்க நகை கடன் கொள்கை தொடர் பான வரைவு அறிக்கையை ஆய்வு செய்த ஒன்றிய நிதியமைச்சகம், சிறு  தங்க கடன் வாங்குபவர்களின் தேவை கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில தளர்வு களை கொண்டு வரலாம் என ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துவது கடினம் என்பதால் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கும் ஒன்றிய நிதியமைச்சகம்- புதிய வழிகாட்டுதல்களை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. அதுவரை, சிறு தொகையை கடனாக வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறை களில் இருந்து விலக்கு அளிக்கலாம் என பரிந்துரை செய்துள்ள ஒன்றிய நிதியமைச்சகம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என கூறியுள்ளது. நிதியமைச்சகத்தின் இந்தப் பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி ஆய்வு  செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஒன்றிய நிதி அமைச்சகம், பொது மக்கள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து தங்க நகைக் கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி மாற்றங் களை கொண்டு வரும் என நம்புவதாக வும் தெரிவித்துள்ளது.