tamilnadu

மதம் மாறிய தலித்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிசீலிக்கலாம்!

புதுதில்லி, ஏப். 12 - மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிக்கக் கோரும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதம் மாறிய பிறகும் சமூகக் களங்கம் தொடர்கிறது என்ற நிலை யில், இதுதொடர்பாக அரசு பரி சீலிக்க வேண்டும் என்று கூறி யிருக்கும் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 3 நீதிபதி கள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,  வழக்கின் அடுத்தகட்ட விசாரணை யை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 1950-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விடுத்த ஆணைப்படி, இந்து தலித்துகளுக்கு மட்டுமே பட்டி யல் வகுப்பு (Scheduled Caste) அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பின்னர் சீக்கியத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1956-ஆம் ஆண்டி லும், பவுத்த சமயத்திற்கு மாறிய தலித்துக்களுக்கு 1990-ஆம் ஆண்டி லும் பட்டியல் வகுப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. எனினும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மாறிய தலித்துக்களுக்கு பட்டியல் வகுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

வழக்குகள்

இதற்கு எதிராக, இந்து மதத்தில்  இருந்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லா மிய மதங்களுக்கு மாறிய தலித்து களையும் பட்டியல் வகுப்பினராக (Scheduled Caste) அங்கீகரித்து அவர்களுக்கும் சட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகள், 2022 நவம்பர் மாதத் துவக்கத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய பாஜக அரசு  தனது பதில் மனுவை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தது. அதில், “இந்து மதத்தில் இருப்பதைபோல் இஸ்லாமிய - கிறிஸ்தவ மதங்களில் சாதியத் தீண்டாமை இல்லை என்ப தால், மதம் மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பினராக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு புதனன்று (ஏப்ரல் 12) நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி அஹ் சானுதீன் அமானுல்லா மற்றும் நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண்,  கொலின் கோன்சால்வ்ஸ் உள்ளிட் டோரும், ஒன்றிய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே. நடராஜூம் ஆஜராகி வாதாடினர். கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் வாதிடுகையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்தில் உள்ள தலித்து களுக்கு பட்டியல் வகுப்பினர் அந்தஸ்து வழங்க 2007-ஆம் ஆண்டு  பரிந்துரைத்த அறிக்கை அனைத்து அம்சங்களுக்கும் செல்லவில்லை. இதனால், தற்போது அமைக்கப் பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் அனுபவ தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தி வருவ தாகவும், அதன் முடிவுகள் வரும் வரை நீதிமன்றம் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் ஆணையமா?

அதற்கு ஏற்கெனவே, 2007-இல்  அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத்  மிஸ்ரா ஆணையம் ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், தற்போது புதிதாக கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டிருப் பதை குறிப்பிட்டு, “அரசு மீண்டும் மீண்டும் ஆணையங்களை நிய மிக்கும் போது, அந்த அறிக்கைகள் வரும்வரை நீதிமன்றம் காத்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி யெழுப்பிய பிரசாந்த் பூஷண், “நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்து 19 ஆண்டுகள் ஆகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “இந்த புதிய ஆணை யத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவ காசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், அறிக்கை வரட்டும் என்று நீதிமன்றம் பல தசாப்தங்களாக காத்திருக்க முடியுமா?” என்றும் கேட்டார். “அரசியலமைப்பு பிரச்சனையை அதன்போக்கிலேயே தீர்மானிக்க முடியாதா?” என அவர் கேள்வி எழுப்பினார். அப்போது, “சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் முடிவெடுக்க முடி யும்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே. நடராஜ் கூற, “புதிய ஆணையத்தின் தரவுகளாவது, அரசி யலமைப்புச் சட்டப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஏற்றதாக இருக்குமா, என்பதுதான் இங்கு கேள்வி” என்று நீதிபதி எஸ்.கே. கவுல் குறுக்கிட்டு கூறினார்.

20 அதிகாரப்பூர்வ ஆய்வுகள்

“முறையான ஆய்வு மற்றும் உரிய ஆவணங்கள் பதிவில் இல்லா மல் பிரச்சனையை முடிவு செய்ய  முடியாது” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே. நடராஜ், முன்பு கூறி யதையே மீண்டும் கூற, “நாங்கள் குறைந்தது 20 அதிகாரப்பூர்வ ஆய்வு களை தாக்கல் செய்துள்ளோம். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைத்துப் பிரச்சனைகளையும்