புதுதில்லி, நவ.26- எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே (73), இரண்டரை ஆண்டு சிறைவாசத்திற்குப் பின், மும்பை சிறையில் இருந்து சனிக் கிழமையன்று விடுதலையானார். மராத்திய பேஷ்வா படை களை வெற்றிகொண்டதன் நூற் றாண்டை, தலித் மக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் கொண்டாடினர். அப்போது, சாதி ஆதிக்க வெறியர்கள் கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியா னார். பலர் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு 2017 டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத் மாநாட்டில், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவர ராவ், கவுதம் நவ்லகா, பிரகாஷ் அம் பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்டோர் பேசிய பேச்சுதான் காரணம் என்று முடிவு கட்டிய மகாராஷ்டிர பாஜக அரசு காவல்துறை, டெல்டும்டே உள்ளிட்ட 16 மீது இந்திய தண்ட னைச் சட்டம் (IPC) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் ஜனவரி 8, 2018 அன்று முதல் தக வல் அறிக்கை பதிவு செய்யப்பட் டது. மேலும், இவர்களுக்கு மாவோ யிஸ்டுகளின் தொடர்பு உள்ளதாக கூறி வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரதமர் மோடியை கொலை செய் வதற்கு திட்டமிட்டதாக புதிய குற்றச்சாட்டுக்கள் புனையப்பட் டன.
கைது செய்யப்பட்டவர்களில் பாதிரியார் ஸ்டான் சுவாமி தனது 83 வயதில் ஜாமீனே கிடைக்காமல் சிறையிலேயே 2021-ஆம் ஆண் டில் மரணமடைந்தார். சுதா பரத் வாஜூக்கு கடந்த 2021 டிசம்பரில் ஜாமீன் கிடைத்தது. கடந்த 82 வய தான கவிஞர் வரவர ராவிற்கு 2022 ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாத நிபந் தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா, புற்றுநோய் பரி சோதனைக்காக வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, இரண் டரை ஆண்டுகளாக சிறையில் இருந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே விற்கும், மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 17 அன்று ஜாமீன் வழங்கியது. அதேநேரம், இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய புல னாய்வு முகமை, உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாகவும், அதுவரை டெல் டும்டேவின் விடுதலையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தது. இத னால் டெல்டும்டே உடனடியாக விடுதலை அடைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, தேசிய புல னாய்வு முகமை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஹீமா கோலி அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப் போது, புலனாய்வு முகமையின் மனுவை தள்ளுபடி செய்து நீதி பதிகள் உத்தரவிட்டனர். டெல்டும் டேவின் ஜாமீனையும் உறுதி செய்தனர். இதையடுத்து, இரண்டரை ஆண்டு சிறைவாசத்திற்குப் பின், சனிக்கிழமையன்று 1.15 மணியள வில் நவி மும்பையில் உள்ள தலோஜா மத்தியச் சிறையில் இருந்து ஆனந்த் டெல்டும்டே வெளியே வந்தார்.