மும்பை, டிச.30- “கருத்துக்களுடன் செய்தி களைக் கலப்பது ஆபத்தான காக்டெ ய்ல். மோதல் அரசியல், பத்திரிகை கள் போட்டி ஆகியவற்றிற்கு இடை யிலான கொடிய கலவை. இதை விட ஜனநாயகத்திற்கு ஆபத்தானது எதுவுமில்லை” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். இதழியல் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான ரெட் இங்க் விருதுகள் வழங்கும் விழா மும்பை யில் நடைபெற்றது. இதில் தலை மை உரை ஆற்றிய தலைமை நீதிபதி ரமணா பத்திரிகையாளர்கள் ஒரு வகையில் நீதிபதிகளைப் போன்றவர்கள். பத்திரிகையா ளர்கள் கூறும் சித்தாந்தம்.
அவர்கள் விரும்பும் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவற்றின் தாக்கத் திற்கு ஆளாகாமல் கடமையைச் செய்ய வேண்டும். முழுமையான மற் றும் துல்லியமான செய்திகளைக் கொடுக்கும் நோக்கில் உண்மை களை மட்டுமே தெரிவிக்கவேண்டும். பத்திரிகையாளர் தொழில் புனித மானது என்று என்னால் கூறமுடியும். ஒரு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவன் என்ற முறையில் பத்திரிகை யாளர்களின் சிரமங்களையும் போராட்டங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதிகா ரத்திடம் உண்மையைப் பேசுவது, சமுதாயத்திற்காக குரல் கொடுப் பது ஒரு மகத்தான பொறுப்பு, அதை நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்றார். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ரமணா, பெண்கள், குறிப்பாக பெரு நகரங்களுக்கு அப்பால், பணிக்குச் செல்வது இன்னும் கடினமாகத் தான் உள்ளது. பத்திரிகை சுதந்திரம் அரசியல் சாசனத்தில் வழங்கப் பட்டுள்ள மதிப்புமிக்க மற்றும் புனித மான உரிமையாகும். இந்தச் சுதந்திரம் இருப்பதால் தான் ஜனநா யகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமை யாத விவாதங்கள் நடைபெறு கின்றன. இந்திய மொழி ஊட கங்கள் மற்றும் சிறிய ஊடக நிறு வனங்களைப் பொறுத்தவரை, வழக்கமான அரசியல் செய்தியா ளர்கள் தேவை ஏற்படும் பட்சத்தில் சட்டம் சார்ந்த செய்திகளை சேகரிப்ப தில் இரு மடங்கு நிபுணத்துவம் பெறுகின்றனர் என்றார்.
பின்னர் மறைந்த டேனிஷ் சித்திக்கிக்கு (38) அஞ்சலி செலுத்திய ரமணா, “டேனிஷ் ஒரு மாயாஜாலங் கள் நிறைந்த மனிதர். இந்த சகாப்த த்தின் முன்னணி புகைப்படப் பத்திரி கையாளர்களில் ஒருவராகக் திகழ்ந்தார். ஒரு படம் ஆயிரம் வார்த் தைகளை சொல்ல முடியும் என்பதற்கு டேனிஷின் புகைப்படங் களும் ஒரு ஆதாரம்” என்றார். டேனிஷ் சித்திக் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் செய்தியாளராகச் சேர்ந்த இவர் பின்னர் டிவிடுடே காட்சி ஊடகத்திற்கு மாறினார். பின்னர் 2010-ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 2018-ஆம் ஆண்டு புலிட்சர் விருதையும் டேனிஷ் பெற்றுள்ளார்.