புதுக்கோட்டை, ஜன.6- வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாய் மூலம் குடிநீர் விநியோ கத்தை கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளியன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்க் குழாயில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அரைமணி நேரத்தில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாற்று ஏற்பாடாக சிறுமின்விசைத் தொட்டி மூலம் அந்த மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், புதிய குடிநீர்க் குழாய் மூலம் வேங்கைவயல் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. புதிய குழாய் மூலம் வழங்கப்பட்ட குடிநீரை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளியன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைச்சாமி, குளத்தூர் வட்டாட்சி யர் சக்திவேல், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் அ.மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவ முகாம்
இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. முகாமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். தோல் நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி மக்களுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.