மாநில வேளாண்துறை பட் ஜெட்டில் கரும்பு விவசாயி கள் மற்றும் சர்க்கரைத் துறை மேம்பா ட்டிற்கு அரசு செய்ய வேண்டியவை குறித்து அமைச்சரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளி யிட்டுள்ள செய்தி: தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறை யில் ஏற்கனவே இருந்த பாதிப்புகளை சரிசெய்து கரும்பு விவசாயிகளின் நலன்களை காத்திடவும், சர்க்கரைத் துறையை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசும், வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் எடுத்து வந்துள்ள நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் அரைத்த கரும்புக்கு பாக்கி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள் ளது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் உதவிகரமாக அமைந்துள்ளது.
அரசுக்கு நன்றி
கடந்த ஆண்டு அரைத்த கரும்புக்கு உத்தரப்பிரதேசத்தில் ரூ.6000 கோடி உட்பட நாடு முழுவதும் சுமார் பத்தா யிரம் கோடி கரும்பு பணப் பாக்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாக்கி இல்லை என்ற நிலைக்கு மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1. உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு கரும்பு க்கு பரிந்துரை விலையை (STATE ADIVSED PRICE) அறிவித்து ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 விலை வழங்கிட வேண்டும். 2. தமிழ்நாட்டில் வெட்டுக் கூலி உயர்ந்துள்ள நிலையில் விவசாயி களும் தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தி வெட்டுக் கூலியை தீர்மானித்து அதை ஆலை நிர்வாகமே கொடுத்துவிட்டு விவசாயிகளின் கரும்பு கிரயப் பணத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை விற்பனை கோட்டாவுக்கு விலக்கு கோருக! 3. தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலை களில் கடந்த ஆண்டு உற்பத்தி செய்த சர்க்கரை விற்பனை செய்ய முடியாமல் குடோனில் இருப்பில் உள்ளது. ஒன்றிய அரசு சர்க்கரை விற்பனைக்கு கோட்டா முறையை அமல்படுத்துவதே இதற்கு காரணம். இதனால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. தமிழ்நாட்டிற்கு கோட்டா முறையில் விதிவிலக்கு வழங்கிட ஒன்றிய அரசிடம் வலியுறுத்திட வேண்டும்.
கூட்டுறவு ஆலைகளை திறந்திடுக
4. மூடியுள்ள கூட்டுறவு ஆலை களை திறந்து செயல்படுத்திட வேண்டும். குறிப்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தபடி அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு ஆலையை திறந்துசெயல்படுத்திட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஆவன செய்திட வேண்டும். 5. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சர்க்கரை ஆலையான திருத்தணி கூட்டுறவு ஆலையை புனரமைத்து மேம்படுத்திட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஆவன செய்திட வேண்டும். இதே போல கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகளை புதுப்பித்து மேம்படுத்திட மாநில அரசு செயல் திட்டத்தை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்திட வேண்டும்.
4 ஆண்டுகால மின்வாரிய நிலுவைத் தொகை
6. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்து மின்வாரியத்துக்கு தரும் மின்சாரத்துக்கான கட்டணத் தொகையை குறிப்பிட்ட கால இடை வெளியில் கூட்டுறவு ஆலைகளுக்கு மின்வாரியம் தருவதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டும். செய்யாறு கூட்டுறவு ஆலைக்கு ரூ.80 கோடி, வேலூர் கூட்டுறவு ஆலைக்கு ரூ.60 கோடி தமிழ்நாடு மின்வாரியம் (டான்ஜெட்கோ) தர வேண்டிய நான்காண்டு கால நிலுவை தொகையை உடனடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை களுக்கு பெற்றுத்தர மாநில அரசு ஆவன செய்திட வேண்டும். தனியார் ஆலைகள் தர வேண்டிய பணம் 7. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி தனியார் சர்க்கரை ஆலை கள் 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு தர வேண்டிய எஸ்.ஏ.பி. பாக்கி ரூ.1217 கோடியையும், 2004-05, 2008-09 ஆண்டுகளுக்கு தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய லாபப் பங்கு தொகை 120 கோடிக்கு மேல் உள்ளதையும் விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாநில அரசு ஆவன செய்திட வேண்டும். 8. தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு சென்ற தரணி, அம்பிகா, ஆரூரான், அரு ணாச்சலம் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய எப்.ஆர்.பி. பாக்கியை வட்டியுடன் முழுமையாக பெற்றுத்தர ஆவன செய்திட வேண்டும்.