பென்னாகரம், அக்.4- விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை யின் சார்பில் புதன்கிழமை (அக்.4) கொண்டாடப்பட்டது. இதில், கோட்டாட்சியர் கீதா ராணி கலந்து கொண்டு சிவாவின் நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும், நினைவு தூணிற்கும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), வட்டாட்சியர் சௌகத் அலி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிர மணி, தருமபுரி மக்கள் தொடர்பு அலு வலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.