tamilnadu

img

பழங்குடியின சாதி சான்று வழங்கிடுக!

நாமக்கல், செப். 19- மலைக்குறவன் சமூக மாணவ -மாணவிகளுக்கு பழங்குடி சாதி சான்று வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மலைக்குறவன் பழங்குடி முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில், புதனன்று நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மூலக்குறிச்சி, முள்ளுக் குறிச்சி, சீராப்பள்ளி, ராசிபுரம், நாவல்பட்டி, மங்களபுரம், திம்மநாயக் கன்பட்டி மத்ரூட், சேந்தமங்கலம், வடு கம் சிராப்பள்ளி, நாமக்கல் பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், வேலை கவுண்டம்பட்டி ஆட்டையாம்பட்டி பிரிவு  மற்றும் பல்வேறு கிராமங் களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைக்குறவன் இன மக்கள் பல தலை முறைகளாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  மலைக்குறவன் இன மக்களுக்கு இனச்சான்று இல்லாமல் பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர்.  ஒருசில மாணவர்கள் படித்து உயர்கல்விக்கு போகும் போது கல்லூரி நிர்வாகத்தால் இனச்சான்று கேட்டு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்க முடியாமல் போகிறது.  பலமுறை இம்மக்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்துள்ள போதும் அதிகாரிகள் எந்தவிதமான விசார ணைகளையும் மேற்கொள்ள வில்லை. இந்த மக்களுக்கு இனச்சான்று வழங்காமல் நிராகரித்து வருவதால், இம்மக்களின் பிள்ளை கள் ஆரம்பக் கல்வியே கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தர வுகள், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கைகள் மலைக் குறவன் இன மக்கள் தமிழகம் முழு வதும் பரவலாக வாழ்ந்து வரு கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.  இந்நிலையில், உரிய விசாரணை நடத்தி இனச்சான்று காலதாமதம் செய்யாமல் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து  ஆர்ப்பாட்டம் மற்றும் மனுகொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டம் மலைக்குறவன் பழங்குடி யினர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.மணி கண்டன், மாவட்டப் பொருளாளர் ஆர்.தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் அரூர்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லி பாபு உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில  துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், சிபிஎம் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் ஏ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சின்னசாமி, சேலம் மாவட்ட மலைக்குறவன் பழங்குடி முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.தனபால், மாவட்ட தலைவர் பி.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதற்கிடையே போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வரு வாய் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட  குழுக்களை அமைத்து, சிறப்பு முகாம் நடத்தி சாதி சான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.