சென்னை,ஜன.7- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரூ.3,719.65 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி மன்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜன.7) 2021-22 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் ,“2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ‘புதுப் பணிகள்’ மற்றும் ‘துணைப்பணிகள்’குறித்த ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கை யின் நோக்கம்”என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் கரும்பு வழங்க 887.66 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது. கொரோனா காலத்தின்போது அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு நிவாரண நடவடிக்கையாக, மளிகைப் பொருட்களின் விநியோகத்தில் மீதத் தொகையான 132.59 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. 15வது நிதிக்குழுவின் சுகாதாரத்துறைக்கான மானியத்தை பயன்படுத்துவதற்காக அரசு ரூ.805.93 கோடியை அனுமதித்துள்ளது இதற்கென துணை மதிப்பீடுகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை என்பதன் கீழ் 300 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
25.10.21 முதல் 14.11.2021 வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு, நிவாரணம் மற்றும் கதற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, அதன் தொடர்பான துறைகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 300 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப் பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் உடனடிச் செலவினங் களை மேற்கொள்வதற்கு பங்கு மூலதனத் தொகையாக ரூ.3,000 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் கூடுதல் கட்டமைட்பபு வசதிகளை வழங்கு வதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு அரசு 418.61 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு பணமாக 182 கோடி ரூபாய் என பல்வேறு பணிகளுக்கு இந்த துணை மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.