இந்தி மாத கொண்டாட்ட விழாவில் தமிழ்நாடு குறித்து பேசிய ஆளுநர் ரவிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தியாவின் 27 மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றும் போது தமிழ்நாடு மட்டும் பின்பற்ற வில்லை என்று ஆளுநர் ஆதங்கப்படுகிறார்.
இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். இன்னொரு தனித்துவமும் உண்டு. இதுவரையிலான 25 ஆளுநர்கள் போல் அல்லாமல் நீங்கள் மட்டும் சட்டத்தையும், தமிழ்நாட்டின் மாண்பையும் மதிக்கத்தவறுவதை சகித்துக்கொண்டிருப்பது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.