கல்வி நிலையங்களில் மிகவும் உயர்வாக மதிக்கப்படுவது ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள். அங்கு படிப்பை முடித்தால் உடனே பெரிய நிறுவனங்களில் வேலை! ஒரு கையில் பட்டம்! இன்னொரு கையில் வேலை! எனவேதான் ஐ.ஐ.டி.களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! இங்கு இடஒதுக்கீடு முழுவதுமாக வும் முறையாகவும் நிரப்பப்படுவது இல்லை. பெரும்பாலும் முற்பட்ட பிரிவினர் அதிகமாக பயிலும் கல்வி நிலையம். இந்த ஆண்டு மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த 36% பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையாம். ஐ.ஐ.டி.க்கே இந்த கதி எனில் வேலையின்மையின் கொடுமையை அறிந்து கொள்ளலாம். இந்த செய்திக்கு பதில் போட்ட பல சங்கி ஆதரவாளர்கள் வேலை கிடைக்காதவர்கள் இட ஒதுக்கீடில் படித்தவர்களாக இருப்பார்கள் என வன்மத்துடன் பதிவு போட்டுள்ளனர். OBC/SC/ST எனில் கீழ்தரமாக பார்க்கும் இவர்களது வர்ணாசிரம DNA மாறாது போலும்!