மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை யில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற வுள்ளது. இம்மாநாட்டிற்கான ஏற்பாடு களை ஆய்வு செய்வதற்காக, கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் பிப்ரவரி 15 சனிக்கிழமை மதுரைக்கு வருகை தந்தார். மாநாடு நடைபெறவுள்ள தமுக்கம் அரங்கினை பிரகாஷ் காரத் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடே சன் எம்.பி., மதுக்கூர் இராமலிங்கம், கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தமுக்கம் அரங்கில் தென் மாவட்டங்களின் பேரூராட்சி தலைவர் களது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்றிருந்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்ன ரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, பி. மூர்த்தி, அர. சக்கர பாணி, அனிதா ராதாகிருஷ்ணன், வி. செந்தில் பாலாஜி ஆகியோர் பிரகாஷ் காரத்தை வரவேற்றனர். திமுகவின் துணைப் பொதுச்செயலா ளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பி னருமான கனிமொழியும் பிரகாஷ் காரத்தைச் சந்தித்து உரையாடினார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத் தாய், எஸ்.பி. ராஜேந்திரன், எஸ். பாலா உள்ளிட்ட கட்சியின் மதுரை மாநகர், புற நகர் மாவட்டத் தலைவர்கள் பிரகாஷ் காரத்தை வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், “ஏப்ரல் 6 அன்று லட்சக்கணக்கா னோர் பங்கேற்கும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறும்,” எனவும்; “மாநாட் டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் படும்” எனவும் தெரிவித்தார். மாலை 3:30 மணியளவில் அவர் தில்லி திரும்பினார்.