tamilnadu

img

கொரோனாவுக்கு பிறகும் வீட்டில் முடங்கிப்போன கடும் ஊனமுற்ற மாணவர்களும் அரசின் பாராமுகமும்

நாகர்கோவில், ஜுலை 25- கொரோனா பொதுமுடக்க காலத்திலும் அதைத் தொடர்ந்தும்  வீடுகளில் முடங்கிப்போன ஆட்டிசம், மனவளர்ச்சி குன்றிய  குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து  வருகின்றன. கொரோ னாவுக்கு பிறகு இத்தகைய சிறப்பு  குழந்தைகளும் அவர்களது பெற்றோர் களும் அனுபவிக்கும் துயரத்தை களைந் திட அரசின் தலையீடு உரிய முறையில் இல்லை என்கிற குமுறல்கள் அவர் களின் இயலாமையின் வெளிப்பாடாக உள்ளது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக  அரசு பள்ளிக் கல்வித் துறை கட்டுப் பாட்டின் கீழ் செயல்படுத்தி வருகிறது. 413 வட்டார வள மையங்களில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு  பயிற்றுநர்கள் 1700 க்கும் மேற்பட் டோர் பணியாற்றுகின்றனர். கொரோ னா பொதுமுடக்க காலத்துக்கு முன்பே வீடுகளில் முடங்கிக் கிடந்த சிறார்களை கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் கல்வி  கற்க வைத்ததில் இந்த பயிற்றுநர் களுக்கு பெரும் பங்கு உள்ளது. பெருந்தொற்று பொதுமுடக்கத்தி லிருந்து இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு சிறப்பு குழந்தைகளின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தால் பெரும் அதிர்ச்சியே காத்திருக்கிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட துறுதுறு குழந்தைகளை அரசுப்பள்ளிகள் ஏற்காத நிலை உள்ளது. மூன்று அரசுப் பள்ளிகளில் தனது 7 வயது சிறப்பு குழந்தையை ஏற்க மறுத்ததால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகில் உள்ள தனியார் சிறப்பு பள்ளியில் சேர்த்துள்ளார் அந்த சிறுவனின் தாய்.

அதே பள்ளியில் கொரோனாவுக்கு முன்பு படித்து வந்தவர் டாலின் வில்ப்ரட் என்கிற 15 வயது சிறப்புக் குழந்தை. உரிய பராமரிப்பை முறை யாக பெற முடியாத இந்த குழந்தை ஏற்கவே மன வளர்ச்சி குன்றிய நிலையி லிருந்து பார்வையிழப்பு, பேச்சு, கேட்புத் திறன் இழப்பு, தீராத சளி இருமல்.. என பல்வகை பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, முத்து நியூரோ, திருவனந்தபுரம் கிம்ஸ், எஸ்.ஐ.டி என சிகிச்சைக்காக பெரும் பொருட் செலவை எதிர்கொண்டிருக்கிறார்கள் அவரது பெற்றோர். இதனை தாங்க  முடியாமல் துவண்டு போயிருக்கிறது இந்த குடும்பம். டாலினின் தந்தை அருள்தாஸ் கூலித்தொழிலாளி. தாயார் ஷீஜா செவிலியராக பணியாற்றியவர். மகனை கவனிப்பதற்காக வேலையை கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது வாழ்வாதாரத்துக்கே வழியில்லாத இந்த குடும்பம் டாலினுக்கு அரசு வழங்கும் ரூ.2000 உதவியைக் கொண்டு அவரை பரா மரிக்க முடியாமல் திணறுகிறது. இது போன்று நூற்றுக்கணக்கான டாலின் களும் அவர்களது ஏழை குடும்பங் களும் பெருந்தொற்றுக்கு பிந்தைய  பாதிப்புகளில் இருந்து மீள முடி யாமல் தவிக்கின்றன. மாற்றுத்திற னாளிகள் நலத்துறையை கருணை  உள்ளத்தோடு தனது பொறுப்பில் வைத் திருப்பதாக நம்பும் குடும்பங்களுக்கு அரசின் உதவிக்கரம் நீள வேண்டும்.  முடங்கிப்போன சிறப்புக் குழந்தை களை அரசுப்பள்ளிகள் மீட்டெடுக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

-சி.முருகேசன்