tamilnadu

img

காலை உணவு சாப்பிடாத மாணவர்கள்: முதல்வர் வேதனை

சென்னை,ஜூலை 27- மாணவர்கள் காலை உணவை தவறவிடக்கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று(ஜூலை 27) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “குழந்தைகளின் புன்சிரிப்பு தரும்  புத்துணர்ச்சியும், பிள்ளைச் செல்வங் கள் பேச்சு தரக்கூடிய உற்சாகமும் மருந்து மாத்திரையை விட வலிமை யானவை” என்றார். இந்த மேடைக்கு நான் வருவதற்கு முன் ஒரு வகுப்பறைக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரை யாடினேன். அப்போது நீங்கள் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்?, எப்படி பள்ளிக்கு வருகிறீர்கள்?, காலை உணவு சாப்பிட்டீர்களா? என்று  கேட்டேன். ஐந்து பேரில் மூன்றுபேர் காலையில் சாப்பிடாமல் வந்ததாக தெரி வித்தனர். இதுதான் உண்மை, இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்றும் முதல்வர் தெரிவித்தார். நான் படிக்கும் காலத்திலும்கூட பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை சாப்பிடாமல் சென்றிருக்கிறேன்.

நகர்ப்பகுதிகள் பரவாயில்லை, கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது இதன்மூலம் தெரிந்துவிட்டது. இந்த கேள்வியை நான் எதற்காக கேட்டேன்  என்றால், பெரும்பாலான மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கூறுகின்றனர். எனவே மாணவர்கள் காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத் துவர்கள் கூறுகின்றனர். பகலில் குறை வாகவும், இரவில் அதைவிட இன்னும்  குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்றுதான், மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், இன்றைக்கு காலையில் குறைவாக வும், இரவு நேரத்தில் அதிகமாகவும் சாப்பிடுகிற ஒரு பழக்கத்தை வைத் துள்ளனர். அதுபோல இருக்கக் கூடாது.  எனவே கட்டாயமாக உறுதியாக, காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது என்றும் முதல்வர் கூறினார்.