tamilnadu

மாணவர்கள் அடையாள கயிறுகள் கட்டக் கூடாது!

மாணவர்கள் அடையாள கயிறுகள் கட்டக் கூடாது! 

கல்வித்துறை அதிகாரி சுற்றறிக்கை

திருநெல்வேலி, ஜூன் 4 - நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல், பள்ளி வளாகத்திற்குள் தாக்குதல் உள் ளிட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த நிலையில், எதிர்வரும் கல்வி யாண்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கல்வித்துறை சார்பில் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தனது நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் 14 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர் களின் நல்லொழுக்கத்தை பேணும் வகையில் இந்த 14 கட்டுப்பாடுகளும் ஆசிரியர்களால் கண்காணிக்கப் பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகளுக்கு வரும்  மாணவர்கள் முறையாக தலை முடியை வெட்டியிருக்க வேண்டும், அதேபோல் பள்ளிக்கு வரும் மாண வர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகளை கட்டியிருக்கக் கூடாது, நெற்றியில் கலர் கலரான பொட்டுகள் வைத்திருக்கக் கூடாது, மாணவிகள் கலர் ரிப்பன் கட்டி வருவதை தவிர்க்க வேண்டும், பள்ளிச் சீருடை யோடு கொடுக்கப்படும் வண்ண ரிப்பன் களை மட்டுமே அணிந்திருக்க வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ - மாணவியரிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும், தினந்தோறும் பள்ளி நுழை வாயிலில் அனைத்து மாணவர்களின் புத்தக பைகளையும் சோதனை செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.