tamilnadu

img

புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடும் மாணவ, மாணவியர்

திண்டுக்கல், டிச.31- புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடுவோம் நிகழ்ச்சியை திண்டுக்கல் இலக்கியக்களம் நடத்தியது.  திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்  செவ்வாயன்று மினி புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. பாரதி புத்தகாலயம், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், வெற்றி மொழி  பதிப்பகம், குறி பப்ளிகேசன் உள்ளிட்ட  புத்தக நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடக்கி  வைத்தார். எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன், டட்லி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டேன்லி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்தி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி யுடன் நிகழ்ச்சி துவங்கியது. வாங்கினேன், வாசித்தேன், சொல் கிறேன் என்ற தலைப்பில் பள்ளி, மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தாங்கள் வாசித்த புத்தகங்களை பற்றி பேசினர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பேரா. ஆர்.மனோகரன், செய லாளர் எஸ்.ராமமூர்த்தி, பொருளாளர் க.மணிவண்ணன், நிர்வாகிகள் வளர்மதி, கோவிந்தராஜ், தங்கம், அனிதா, கணேஷ்குமார், ரவீந்திரன், லோகக்கனி, சண்முகம், முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.