tamilnadu

img

ஆளுநர் ரவியைக் கண்டித்து பல்கலைக்கழகங்கள் முன்பு மாணவர் சங்கம் ஆவேசப் போராட்டம்

சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் உள்ள 3  பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக தேர்வு செய்து அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும்  அறி விப்பை திரும்பப் பெறக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளியன்று தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தில் மாநிலத்தலைவர் கோ.அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாநில துணைத் தலைவர் மோகன், மாநில இணைச் செயலாளர் ஜனா உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழ கத்தில் மாநில துணை தலைவர் தமிழ்பாரதி தலைமையிலும், தமிழ் பல்கலைக்கழகத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சந்துரு தலை மையிலும் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் அசார், மாநிலக்குழு உறுப்பினர் பிரவின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை காமராஜர்  பல்கலைக் கழகத்தில் மத்தியக்குழு உறுப்பி னர் பிருந்தா தலைமையில் நடை பெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் பாலா, மாநிலக்குழு உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தில் மாநி லக்குழு உறுப்பினர் அருள் ஷைலஸ் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பி னர் முபீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.