மதுரை, ஜன.31- தஞ்சாவூர் +2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் தனியார் பள்ளி யில் படித்துவந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு, மாணவியை பள்ளி நிர்வாகம் மதமாறக் கட்டா யப்படுத்தியதால்தான் தற்கொலை என்று பாஜக பரிவாரங்கள் கூறின. ஆனால் விடுதிக் காப்பாளர் திட்டியதால்தான் தற்கொலை நடந்தது என பரவலாக கூறப் பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, வீடியோவை மாணவியின் இறப்பிற்கு பிறகு பரப்புவதற்கு காரணம் என்னவென்று விசார ணையின்போது அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் விசாரணை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியின் வீடியோ வை எடுத்த முத்துவேல் விசார ணைக்கு முழுமையான ஒத்து ழைக்கவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் மாணவியின் பெற்றோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்ட தாக மனுதாரர் தரப்பில் தெரி விக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்த போது, மாணவியின் பெற்றோர் வழக்கை சிபிஐக்கு மாற்ற முறை யிட்டதை தொடர்ந்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான பிரச்சனை யை தமிழகத்தில் சிறுபான்மை மக்க ளுக்கு எதிரான மதவெறிக் களமாக மாற்றுவதற்கான ஓர் ஆயுதமாக பயன்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சிறு பான்மை மக்களையும் கல்வி நிறுவனங்களையும் பாதுகாப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித் திருப்பது குறிப்பிடத்தக்கது.