tamilnadu

img

பட்டன்கள் அதிகம் உள்ளதைக் காரணம் காட்டி நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு

பட்டன்கள் அதிகம் உள்ளதைக் காரணம் காட்டி நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல்

திருப்பூர், மே 4 - திருமுருகன்பூண்டியில் நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்த தைக் காரணம் காட்டி தேர்வு அறைக் குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்ததும் அவலத்தை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு மையங்கள் திருப்பூர் மாவட்டத்தில் உடு மலை, தாராபுரம், பெருமாநல்லூர், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட ஏழு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,212 மாணவ-மாணவி கள் தேர்வு எழுத வந்திருந்தனர். சர்ச்சைக்குரிய சம்பவம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏ.வி.பி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் காலை 11 மணி முதல் மாணவர்களை சோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். ஊத்துக்குளியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நீட்  தேர்வு எழுத வந்தபோது, அவரது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படங் களைச் சரிபார்த்த பின்னர் உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அலு வலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி னர். அவர் அணிந்திருந்த சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த மகளிர் காவலர் ஒருவர் அந்த மாண வியை தனது இருசக்கர வாக னத்தில் கடைக்கு அழைத்துச் சென்று வேறு துணி வாங்கிக் கொடுத்தார். புதிய உடை அணிந்த பின்னர் மீண்டும் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாணவர் சங்கத்தினர் போராட்டம் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து  மாணவர் சங்கத்தினர் போராட்டம்  நடத்தச் சென்றனர். காவல்துறை யினர் பாதி வழியிலேயே வாக னங்களை இடைமறித்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டனர். இதனால் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது தலைமையில் மாண வர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கல்கிராஜ், செயலாளர் பிரவீன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுதா, நிர்வாகிகள் பொன்னம்மாள், ஜோதிபாசு, மணிகண்டன், நிஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காவல்துறை தாக்குதல் போராட்டக்காரர்களைக் கைது  செய்யும் நோக்கத்தில் காவல்துறை யினர் தாக்குதல் நடத்தி வாக னத்தில் ஏற்றிச் சென்றனர். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்பட பலர் காயமடைந்தனர். மாணவர் சங்கத்தினர் கண்டனம் மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில்: “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. தேசிய தேர்வு முகமை வினாத் தாள் முறைகேட்டில் 480 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மாண வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்த பின்பும் அதிக பட்டன்கள் உள்ளதாகக் கூறி தேர்வு எழுத மறுப்பது, தாலியைக் கழட்டச் சொல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் வடமாநிலங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் தேர்வு மையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனடியாக நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.

கடினமான கேள்விகள்: மாணவர்கள் கண்ணீர்

எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் (விண்ணப்பித்த தரவின் படி - ஆப்சன்ட் அறிக்கை துல்லியமாக  வெளியாகவில்லை) எழுதிய இந்த நீட் தேர்வு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,453 தேர்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.  கடினம் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை (தேர்வு அறை நேரம்) நடைபெற்ற இந்த நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெற்றன. மொத்த மதிப்பெண் 720 என்ற நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தேர்வறையை விட்டு வெளியே வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உயிரியல் : உயிரியியல் பகுதி இயற்பியல், வேதியியலை விட சற்று எளிதாக இருந்தாலும், கேள்விகள் நீளமானதாக இருந்தது. இதனால் பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் உயிரியல் பகுதியை விரைவாக முடிக்க முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். இயற்பியல் : அதே போன்று இயற்பியல் பகுதியில் கணக்கீடு, அதாவது கால்குலேஷன் தேவைப்படும் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கால்குலேஷன் செய்ய வேண்டியிருந்தது. 5 கேள்விகளே நேரடியாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இதனால் விடையளிக்க கடினமாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். வேதியியல் : வேதியியல் பகுதி வினாக்களில் என்சிஇ ஆர்டி புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகள் குழப்பமாக கடினமாக கேட்கப்பட்டிருந்தன. வேதிச் சமன்பாடுகளில் தனிமங்கள் மாற்றம் செய்யப்பட்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. நேரடி கேள்விகள் இல்லாததால் பதிலளிக்க சற்று சிரமமாக இருந்தது என மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.