tamilnadu

img

விஐடியில் மாணவர் பேரவை: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வேலூர், நவ.9- விஐடி பல்கலைக்கழக மாணவர் பேரவையின் புதிய நிர்வாகிகள் பொறுப் பேற்கும் விழா வேந்தர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு பேசுகை யில், “கல்லூரியில் படிக்கும்போது நமக்கு ஒழுக்கம் தன்னம்பிக்கை கிடைக்கிறது” என்றார். இயற்கை தான் வாழ்க்கை. நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மாணவர்கள் எதற்கும் கவலைப்பட கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  வேந்தர் விசுவநாதன் தமது தலைமை உரையில், “பேரவை நிர்வாகிகள் மாண வர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பாலமாக இருக்க வேண்டும்” என்றார். விஐடி கல்வி நிறுவனம் சிறந்த  கல்வியை கொடுத்துவருகிறது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கி றது என்றும்கல்லூரி படிப்பு என்பது  மிகவும்  முக்கியம். இங்கு பல்வேறு மாநி லங்களில் இருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர். நான் வெளி நாடுகளுக்கு செல்லும் போது முன்னாள்  மாணவர்களை சந்திக்கிறேன். இங்கு  படிக்கும் மாணவர்கள் அனைவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர் நல உதவி இயக்குநர் ஆர்த்தி  வரவேற்றார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் பேசினர். மாணவர் நல இயக்குநர் நைஜூ தலை மையில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட னர். மாணவர் நல உதவி இயக்குநர் ஷர்மிளா நன்றி கூறினார்.