tamilnadu

img

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

புதுக்கோட்டை, ஜன.21 - சாலையில் செல்பி எடுத்து நின்றவர்களிடம் வழிவிடச் சொன்னதற்காக தலித் இளைஞர் இருவரை குளத்தில் மூழ் கடித்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது பூங்குடி கிராமம். இங்குள்ள தலித் வகுப்பைச் சேர்ந்த மலையப்பன் மற்றும் அவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்கள் இருவரும் கைக்குழந்தையுடன் அருகில் உள்ள  வெள்ளனூர் கிராமத்திற்கு கடந்த 14 ஆம் தேதி இருசக்கர ாகனத்தில் சென்றுள்ளனர். வழியில் சில இளைஞர்கள் சாலை யை மறித்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.  அவர்களிடம் பாண்டிச்செல்வியும், மலையப்பனும் நாங்கள் அவசரமாக செல்ல வேண்டும்.

எனவே, வழி விடுமாறு தெரிவித்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்பி எடுப்பதிலேயே கவனமாக இருந்துள்ள னர். பொறுத்துப் பார்த்த இவர்கள் நாங்கள் அவசரமாக செல்ல வேண்டும், வழிவிடுங்கள் என சற்று உரத்த குரலில் கூறியுள்ளனர்.  இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ‘உயர் சாதி’யைச் சேர்ந்த எங்களை எப்படி அதட்டிப் பேசலாம் எனக்கூறி மலையப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து வெள்ளனூரில் உள்ள தனது சகோதரர் ஆறுமுகத் திற்கு பாண்டிச்செல்வி தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் மற்றும் புஷ்பராஜ் ஆகியோருடன் பாண்டிச்செல்வி வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் அளித்துவிட்டு வரும் வழியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேற்படி தலித் இளைஞர்கள் இருவரையும் சாதியை சொல்லி கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் மேற்படி இளைஞர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்று 13 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், கொலை முயற்சியிலும் வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

மேற்படி சம்பவத்தை தொடர்ந்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் கலையரசன், மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். சுப்பையா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனையிலும், அவர்களது இல்லத்திலும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் கலையரசன் கூறுகையில், “சாலையை மறித்து நின்றவர்களை வழிவிடச் சொன்னதற்காக இத்தகைய கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் இப்படியொரு மனித உரிமை மீறல் நடத்தப் பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில், 13 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் கொலை முயற்சியில் வழக்குப் பதிவு செய்தி ருப்பதை வரவேற்கிறோம். மீதமுள்ள அனைவரையும் உடனடி யாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மீதும் வழக்குப் போடும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும். மேலும், இப்பகுதியில் நிலவும் தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை, கோவிலுக்குள் சென்று சாமிகும்பிட மறுப்பது, தலித் பகுதிகளுக்கு பேருந்தை வர விடாமல் தடுத்துள்ளது போன்ற தீண்டாமை வன்கொடுமை களையும் தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.