மதுரை, ஆக.20- தமிழநாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கம் சார்பில் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செப்ட ம்பர் 13 ஆம் தேதி முதல் நடை பெற உள்ளது. இதனை முன்னிட்டு வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமையன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் மா.விஜயபாஸ்கர் வரவேற்றுப் பேசினார். தலைமைச்செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் துவக்கிவைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பாரி பேசி னார். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் வாழ்த்திப் பேசி னார். சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தர ராசன் நிறைவுரையாற்றி னார். மதுரை மாவட்டத் தலைவர் க.ரா. சந்திர சேகரன் நன்றி கூறினார்.
மாநாட்டில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் பேசுகையில், “இன்று எல்லா துறைகளி லும் நிரந்தரமற்ற தொழி லாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால், நிரந்தரம் இல்லை என்று பொருள். தொழிற்சங்கமே வைக்கக் கூடாது என்று பொருள். இட ஒதுக்கீடு இல்லை என்று பொருள் என இத்தனை அர்த்தம் உள்ளது. பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்ட த்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இதனை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு மக்களிடமும் ஊழியர்களிடமும் பேச வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் பிரச்ச னைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஊரக வளர்ச்சி த்துறை ஊழியர்களுக்கு சிஐடியு ஆதரவாக நிற்கும்” என்று தெரிவித்தார்.
தீர்மானங்கள்
வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங் களையும் உடனே நிரப்ப வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். சட்ட மன்ற அறிவிப்பின்படி பணி விதிகளை உடனே வெளி யிட வேண்டும். எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் (MGNREGS) கணினி உதவி யாளர்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கருமாத்தூர் சிவமணி கோடாங்கி ஆட்டம், கரிசல் கருணா நிதியின் பாடல்கள் இடம் பெற்றன.