சென்னை, மார்ச் 26 - தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அனைத்து துறை ஓய்வூதியர்களும் கலந்து கொள்கின்றனர். இது தொடர்பாக அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலா ளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் கே.கர்சன், துணைத் தலைவர் எஸ்.பிரபா கர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் இணைந்து மார்ச் மாதம் 28-29 இரு நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்துகின்றன. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருகிறது. சொத்துக்களை விற்கும் வகையில் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களை நாசம் செய்து வருகிறது. பிஎப்ஆர்டிஏ சட்டத்தின் மூலம் என்பிஎஸ் திட்டத்தை அமலாக்கி ஓய்வூதிய உரிமைகளை பறிக்க மாநில அரசுகள் புதிய சட்டங்களை கொண்டு வரத் துடிக்கின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை முறிய டிக்க இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்துகிறது. இந்த போராட் டத்தை ஆதரிப்பதோடு, தொழிற் சங்கங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக் கைகளிலும் பங்கேற்போம். வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்துதல், தொழிற்சங்கங்க ளுடன் இணைந்து இயக்கத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் ஓய்வூதியர் கள் ஈடுபடுவார்கள்இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.