தஞ்சாவூர், செப்.29- கொள்முதல் நிலையங் களில் விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக ஞாயிற் றுக்கிழமைகளிலும் கொள் முதல் நிலையங்கள் செயல் படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித் துள்ளார். தஞ்சாவூரில் வியாழ னன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் மட் டும் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் கட்டப்பட்டு வருகி றது. இந்த பணிகள் அக்டோ பர் 31-ஆம் தேதிக்குள் நிறை வடையும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 2021-2022 குறுவை பருவத்தில் 66 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு 1,97,633 மெட் ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 618 கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டன. நடப்பு கொள்முதல் பரு வத்தில் 72,816 ஹெக்டேர் கொள்முதல் நெல் பயிரிடப் பட்டுள்ளது. இதற்காக 318 இடங்களில் நெல் கொள் முதல் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. நெல் அதி கமாக வரும் இடங்களில் மற்றொரு கொள்முதல் நிலையமும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவ சாயிகள் வேண்டுகோள் விடுத்தால் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 58 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட செமி குடோன்கள் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது டெல்டா மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே கொள்முதல் நிலையங்க ளில் விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக ஞாயிற் றுக்கிழமை களிலும் கொள் முதல் நிலையங்கள் செயல் படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியில் இதுவரை 40 புகார்கள் வந் துள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கொள்முதல் நிலையங்களி்ல் எவ்வித முறைகேடும் இல்லாமல் இருக்க காவல் துறையின ரும் உரிய நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 60 மூட் டைகள் வரை தான் கொள் முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்த னர். இதற்காக ஆன்லைனில் தளர்வு அளிக்கப்பட்டுள் ளது. விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்யப்படும். அதே போல் நெல் மூட் டைகளின் எடை 50 கிலோ வாக இருக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கொள்முதல் பரு வங்களில் இந்த முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.