9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு திறக்க நடவடிக்கை
தஞ்சாவூர், மே 11- தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.11.82 கோடி யில் 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு விழா, 2025-26 நிதியாண்டில் ரூ.7.45 கோடி யில் புதிதாக கட்டப்படவுள்ள 13 கட்டடங் களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோ தனைக்கு ரூ. 17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவ மனைகளில் ரூ. 1,000 முதல் ரூ.4 ஆயி ரத்தில் செய்து கொள்ளலாம். உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்து வமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இது வரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல, மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறு கின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கண்காணித்து, பராமரிப் பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக் காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டு களில் ரூ.65.80 கோடியில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.23.75 கோடி யில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வரும்போது திறக்க வுள்ளார்” என்றார். இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட ஆட்சி யர் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மக்க ளவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திர சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக் குமார், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) கோ. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பி.கலைவாணி நன்றி கூறினார்.
மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கு தடை
சென்னை, மே 11- மருந்துக் கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கி ணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக் கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகி தத்தை குறைப்பது, கள பணியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், மருத்துவம் சார்ந்த அணுகுமுறைகள், கொள்கை சீர்திருத்தங் கள், சமூக பங்களிப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயில ரங்கை தொடங்கி வைத்தார். அதில் உரையாற்றிய அமைச்சர், “தமிழ கத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் (8.02 லட்சம்) மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதில் 56 சதவீத (4.51 லட்சம்) பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. கர்ப்பிணிகளை கண்டறிவதில் முதல் இடத் துக்கான விருதையும், அதிக மகப்பேறு மையங் கள் கொண்டதில் 2 ஆவது இடத்துக்கு விரு தையும் தமிழகத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் உள்ள தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய சிறப்பு பராமரிப்பு பிரிவு செயல்படுகிறது. பேறுகாலம் தொடங்கி குழந்தையின் 18 வயது வரையிலான விவரங்கள் ‘பிக்மி’ மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மென்பொருள், ‘102’ அழைப்பு சேவை மூலமாக மாநில, மாவட்ட அளவில் கர்ப்ப கால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில, மாவட்ட அளவில் பணி குழு அமைக்கப் பட்டு, அனைத்து மகப்பேறு உயிரிழப்புகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், மருந்துக் கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது” என்றார். இதில், சுகாதாரத் துறை செயலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன், தேசிய நலவாழ்வு குழும ஆலோசகர் ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் உள்ள அனைத்து சீமாங்க் மையங்களில் இருந்து 129 மகப்பேறு மருத்துவர்கள் பயில ரங்கில் கலந்து கொண்டனர். மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.