சென்னை, ஜூன் 11- புன்னகைப்பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தி யில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்த தினம் கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு தமி ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளார். இதில், புன்னகை பூத்துக் குதூக லிக்க வேண்டிய குழந்தை களைக் கசியும் கண்ணீ ரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக் ்காது. குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்; குழந்தைப் பருவம் விளை யாடி மகிழும் இனிய பருவம். துள்ளித் திரிந்து, பட்டாம் பூச்சிகளைப் போல சிறகடித் துப் பறந்து மகிழும் குழந் தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயில வும், உடன் பயிலும் மாண வர்களோடு கதை பேசி களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்று பெறும். குழந்தைப் பருவத்தி லேயே அவர்களை வேலை க்குச் செல்லப் பணித்து, சொற்பத் தொகைக்காக அவர்களின் பொன்னான எதிர்காலத்தை பாழ்படுத்தி அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடுவது ஒரு தீவிர சமூகக் குற்றமாகும். வனத்தில் வளர வேண்டிய தேக்கு மரத்தை தொட்டியில் வளர்ப்பதைப் போல அவர்களது சிறகு களைக் கத்தரித்து, சுதந்தி ரத்தைப் பறித்து, குழந் தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.