tamilnadu

img

கன்னிமரா நூலக நுழைவுவாயிலில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலை!

கன்னிமரா நூலக நுழைவுவாயிலில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலை!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 5 - மாமேதை காரல் மார்க்சின் சிலை,  சென்னை கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் நிறுவப்படும் என்று தமிழக முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேர வையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உலகத் தொழி லாளர்களே ஒன்று கூடுங்கள்” என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை- வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ். ‘இழப்பதற்கென்று எதுவு மில்லை- பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது’ என்ற நம்பிக்கை விதை களை விதைத்தவர்!” என்று புகழாரம் சூட்டியிருந்தார். மேலும், “அறிவுலகத் தொலை நோக்குச் சிந்தனையாளர்! உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை  அடைந்துள்ள பல்வேறு மாற்றங் களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான்” என்று குறிப்பிட்டிருந்த முதலமைச்சர், “’உலக மாமேதை காரல் மார்க்ஸ்’ அவர் களைப் பெருமைப்படுத்தி போற்றிட திமுக அரசு விரும்புகிறது” என்றும், அதனடிப்படையில், மாமேதையின் உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் அமைக்கப்படும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான், காரல் மார்க்சின் 207-ஆவது பிறந்த நாளையொட்டி (மே 5), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதி கொள்வோம்!” என்று அழைப்புவிடுத்தார். அத்துடன், “உழைப்போர்க்கு உறு துணையான மார்க்சியச் சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்றும் தெரி வித்தார். “சிலையாக எழுந்து நிற்க வுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனை கள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும்  ஒளி வழங்கட்டும்” எனவும் முத லமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.