tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை

சேலம், டிச.17- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை சேலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், 600க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை சேலத்தில் கே.ஆர்.சங்கரன் திடலில் (ராஜமாணிக்கம் வேல் கவுண்டர் திருமண மண்டபம்) சனி யன்று நடைபெற்றது. முன்னதாக, சீருடை யுடன் அரசு ஊழியர்கள் பங்கேற்ற பிரம் மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியை அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். பின் ப.வாசுதேவன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு ஊழியர் சங்கங்க ளின் கொடிகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் க. ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அத னைத்தொடர்ந்து தியாகிகள் வீரவணக்கம் செத்தப்பட்டது. இதன்பின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வர வேற்புக்குழு தலைவர் கோ.சுகுமார் வர வேற்புரையாற்றினார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளர் மதுக்கூர் ராமலிங்கம் வாழ்த்துரையாற்றினார். மாநில பொதுச செயலாளர் வேலை மற்றும் ஸ்தாபன அறிக்  கையை முன்வைத்தார்.

மாநிலப் பொருளா ளர் மு.பாஸ்கரன் வரவு - செலவு அறிக்கை யை முன்வைத்தார். பிரதிநிதிகள் அறிக்கை யின் மீது விவாதம் நடத்தினர். தீர்மானங் களை மாநில துணைத்தலைவர்கள் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் முன்மொழிந்தனர். முடி வில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் பி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றி யாற்றினார். அரசு ஊழியர் சங்க மதிப்புறு தலைவர் வெ.அர்த்தநாரி நன்றி கூறினார்.  இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொது  அமர்விற்கு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் மு.அன்பரசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நா.திருவரங்கன் வர வேற்புரையாற்றினார். அறைகூவல் தீர்மா னங்களை விளக்கி பொதுச்செயலாளர் ஆ. செல்வம் உரையாற்றினார். அப்போது, ‘‘மறக்கப்பட்டதும், மறுக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதும்’’ என்ற தலைப்பில் சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு தலைமை  செயலக சங்கத்தின் தலைவர் மு.வெங்க டேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு. மணிமேகலை ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். முடிவில், சேலம் மாவட்டச் செயலா ளர் பு.சுரேஷ் நன்றி கூறினார்.  முன்னதாக, பொது அமர்வில் சேலம் வி.பி.சிந்தன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநில பிரதி நிதித்துவ பேரவையில் 650க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து பங்கேற்றனர்.