tamilnadu

img

அரசு ஊழியர்கள் டிசம்பரில் பேரணி மாநில பிரதிநிதித்துவப் பேரவை அறிவிப்பு

செங்கல்பட்டு, அக்.8- வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க, வருகின்ற டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதல்வரிடம் முறையிட  கோட்டையை நோக்கி பேரணி நடத்து வது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40வது மாணிக்க ஆண்டு மாநில பிரதிநிதித்துவப் பேரவை செங்கல்பட்டில் சனிக்கிழமை (அக். 7)  மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலை மையில் நடைபெற்றது. வரவேற்பு குழு தலைவர் என்.இளங்கோ வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் எ.ஸ்ரீகுமார் துவக்கி வைத்து பேசினார். வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், வரவு-செலவு அறிக்கையை மாநில  பொருளாளர் மு.பாஸ்கரன் ஆகியோர் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.  பேரவையை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நெ.இல.சீதரன் பேசினார். அரசு ஊழியர் சங்க  செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்  சா.முகமது உசேன் நன்றி கூறினார். பழைய ஓய்வூதியம்,  வரை யறுக்கப்பட்ட ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்ற வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப் பூதியத்தில் உள்ளவர்களுக்கு கால முறை ஊதியம் பெற்றிட, அவுட் சோர்சிங், அத்துக்கூலி கொத்தடிமை முறையை ஒழித்துக் கட்ட  தமிழ்நாடு முதல்வரிடம் முறையீடு செய்ய கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைந்த மனிதவள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும், புதிய மருத்துவக் காப்பீ ட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்த வேண்டும், குறைபாடுகளை களைய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.