tamilnadu

img

மாநில கல்விக் கொள்கை: மக்களிடம் கருத்து கேட்க முடிவு

சென்னை,ஜூலை 13- மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முரு கேசன் தகவல் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை வடிவ மைப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  தில்லி உயர் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி முரு கேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது இந்த கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து களை கேட்க உள்ளது. தேசிய கல்விக் கொள் கையில் பல்வேறு பாதக மான அம்சங்கள் இருப்ப தாக திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மேலும் திமுகவின் தேர்தல்  அறிக்கையில் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டிற் குத் தனியாகக் கல்விக்  கொள்கை உருவாக்கப் படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு புதிய கல்விக்  கொள்கை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை  அமைத்து உத்தரவிட்டார்.

அந்தக் குழுவின் தலை வராக முன்னாள் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் நியமிக் கப்பட்டார். மேலும், உறுப் பினர்களாக சவீதா பல்  கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜவகர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்  குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், ராம சீனிவா சன், யூனிசெப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்தினம் உள்ளிட்ட வர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு ஓராண்டு காலக்கெடு வழங்கியது. இந்நிலையில், தில்லி உயர்  நீதிமன்ற முன்னாள் நீதிபதி யும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலை வருமான முருகேசன் தலை மையில் சென்னை அண்ணா  பல்கலைக்கழக வளா கத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில்  மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் கல்விக்  கொள்கையை வடிவமைப் பதில் உள்ள சவால்கள் குறித்து குழுவினர் தீவிர மாக ஆலோசனை செய்த னர். 

அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நீதி பதி முருகேசன், புதிய கல்விக் கொள்கை வடிவ மைப்பு விதித்து எட்டு மண்ட லங்களாகப் பிரித்து தமிழ் நாட்டில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து அறிவிப்பு இரு நாட் களில் முறைப்படி அறிவிக் கப்படும். பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிப் பதற்குத் தேவையான மின்னஞ்சல் முகவரியும், நேரடி முகவரியும் அறிவிக்க  உள்ளோம். கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். மேலும் நேரடியாகப் பொது மக்களிடம் நாங்களும் கருத்துக்களைப் பெற உள்ளோம். புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பது குறித்து கல்வியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட வர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலும் பள்ளிக்கல்வித் துறை. உயர்கல்வித் துறை,  சமூக நலத்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை உள்ளிட்ட  கல்வித்துறை உடன் தொடர் புடைய அனைத்து துறை களின் அதிகாரிகளையும் அழைத்து வரும் 26 மற்றும் 27 தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.