tamilnadu

img

மாநில குத்துச்சண்டைப் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற மாணவருக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, பிப்.2-  மயிலாடுதுறை அருகேயுள்ள பல்லவராயன்பேட்டை கிராமத்தில் செயல்பட்டுவரும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நூற்றுக் கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர்‌.சாமுவேல், சிவ கங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறையால் நடத்தப்பட்ட மாநில அள விலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாநிலப் போட்டியில் பதக்கம் வென்று ரயில் மூலம் சொந்த ஊர்  திரும்பிய மாணவனுக்கு மயிலாடு துறை ரயில் நிலையத்தில் திரளாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரயில் நிலையம் வந்த மக்கள், வெற்றி பெற்ற மாணவன் சாமுவேல், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.  அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாவை சந்தி த்து வாழ்த்துப் பெற்றனர். குத்துச் சண்டை போட்டியில் மாநில அளவில்  பரிசு பெற்றுள்ள மாணவர் சாமுவேலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

;