tamilnadu

img

பொங்கலன்று தேர்வு நடத்துவதா?

சென்னை, ஜன.13- பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளர்க் பணியிடங்களுக்கு நுழைவுத் தேர்வை பொங்கல் அன்று நடத்த அறிவிப்பு வெளியிட்டதை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. தேர்வுத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தேர்வை வேறு நாளுக்கு மாற்றக்கோரி வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால், தேர்வு நாள் மாற்றப்படவில்லை. இதனைத் கண்டித்தும், தேர்வு நாளை மாற்றக் கோரியும் வெள்ளியன்று (ஜன.13) நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டாரத் தலைமையகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று முற்றுகையிட்டனர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.,  தலைமையில் நடைபெற்ற இந்த  போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:

தேர்வு அட்டவணையை வங்கி  நிர்வாகம் 20 நாட்களுக்கு முன்பு  வெளியிட்ட உடனே, நிதியமைச்சகத் திற்கும், வங்கி தலைமை அதிகாரி களுக்கும் தேர்வு தேதியை மாற்ற  வலியுறுத்தி கடிதம் எழுதினேன். இதே போன்று பல நாடாளுமன்ற உறுப்பினர் களும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், தேதியை மாற்றவில்லை. தமிழர் திரு நாளான பொங்கல் நாளன்று தேர்வு  நடத்துவதுபோல், விநாயகர் சதுர்த்தி  அன்று நடத்துவீர்களா? தமிழர்கள்  மீதுள்ள விரோதம், குரோதத்தின் வெளிப் பாடாக இந்த நாளை தேர்ந்தெடுத்து தேர்வு அறிவித்துள்ளனர். இந்த தேர்வை மாணவர்கள் தமிழிலும் எழுத லாம். தேர்வு நாளன்று வங்கி ஊழி யர்கள் பணிக்கு வந்து தேர்வுப் பணி யாற்ற வேண்டும்.  இந்த பிரச்சனைக்கு முழு முதல் காரணம் பிரதமர் மோடியும், நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனும்தான். திருவள்ளுவர் வேடம் போட்டாலும், காசி சங்கமம் நடத்தினாலும் உங்களின் உள்ளத்தில் உள்ளது வர்ணாசிரம வெறி யும், இந்தி - சமஸ்கிருத வெறியும்தான். இந்திய தேசிய இனங்கள், மொழிகள் மீது துளியும் மரியாதை கிடையாது. நிதியமைச்சகம், வங்கி நிர்வாகத்திடம் பலமுறை பேசிய பிறகும், ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை மதம் என்ற ஆணவப் போக்கோடு செயல்படுகின்றனர். ரம்ஜான் அன்று நிலைக்குழு கூட்டத்தை அறி விக்கிறார்கள். எனவே, இது ஒரு தேர்வு  சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தின் ஒருபகு தியாக இந்த போராட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட தலைவர்களை வட்டார தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணன் அழைத்து பேசினார். அப்போது, உறுதி யான பதிலை கூறாததால் சு.வெங்க டேசன் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர். நிர்வா கம் அளித்த உணவையும் புறக்கணித் தனர். நண்பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மாலை  4.30 மணியை எட்டியது. இந்நிலை யில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் வங்கிக்கு வந்து போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.