மாநில சுயாட்சி கோரிக்கையை இந்திய அரசியல் அரங்கில் உரத்து முழங்கிய இரண்டு முக்கிய குரல்கள் தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் மேற்கு வங்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசு ஆகியோர். இரு தலைவர்களும் வெவ்வேறு தருணங்களில் மாநில சுயாட்சிக்காக எழுப்பிய முழக்கங்களின் சாராம்சம், கண்ணூரில் ஏப்ரல் 9 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ள மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கினையொட்டி இங்கு தரப்படுகிறது.
தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி 1969 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். 10.3.1971இல் அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மாநில சுயாட்சி தீர்மானத்தை கலைஞர் சட்டப் பேரவையில் முன் வைத்து உரை யாற்றினார். அப்போது நடைபெற்ற விவா தத்தின் போது குறுக்கிட்டு அவர் பேசிய திலிருந்து...
“இன்றைய தினம் மாநில அர சுக்குள்ள வேலை என்ன? மக்களுக் குச் சோறு போடுவது - வேலை வாய்ப்புத் தருவது- தொழில் நீதியை நிலை நாட்டுவது- சுகாதாரத்தைப் பேணுவது- கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்ய வேண்டியது மாநில அரசு? “ஆனால், மத்திய அரசின் வேலை என்ன? நாடக மேடையிலே வருகிற இராஜா, மந்திரியை அழைத்து, ‘மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பானாம். அதுபோல மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை, மத்திய மந்திரி தில்லியில் கூட்டி, “பள்ளிக் கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கி றார்கள். இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புத்தான் இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை!
“மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசு தானே தவிர- மத்திய அரசு அல்ல.” “மக்கள் மீது அக்கறை இருக்க லாம் மத்திய அரசுக்கு. அது எப்படிப் பட்ட அக்கறை?- அண்ணா விளக்கு கிறார்: “குடிசைப் பகுதியில் தீப் பற்றிய தும் மூன்றாவது மாடியிலுள்ள சீமான் ஏதோ புகை தெரிகிறதே, தீ விபத்துப் போலிருக்கிறதே!” என்று கூறுவானே, அதைப் போன்ற அக்கறைதான் மத்திய அரசின் அக்கறை.” ”ஆனால் குடிசைப் பகுதியில் தீப் பற்றியதும் பதறித் துடிப்பது யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசை வாசிதான். அதைப்போல் மாநில அரசு தான் மக்களின் குறை களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது. “அதிகாரம் தேவைக்கு அதிகமாகக் குவிந்துவிட்டதால் என்ன நடக்கிறது? நான்,” (நான் என்றால் அண்ணா சொல் கிறார்கள்) “நான் அண்மையில் தில்லி உணவு அமைச்சரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
“எனக்குத் தொலைபேசியில் பேசும் சக்தி அதிகம் இல்லையாதலால் (அண் ணா சொல்கிறார்) என்று நண்பரை விட்டுப் பேசச் சொன்னேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன் ராம் (அப்போது ஜெகஜீவன் ராம் உணவு அமைச்சர்) ஊரில் இல்லாததால் துணை அமைச் சர் ஷிண்டே பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்க ரையை வெளிக் கொணரும் உத்தரவு தில்லியில் இருந்து வராததால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்குக் கூற முயன்றேன். கள்ளக் குறிச்சி என்ற பெயரைப் புரிந்து கொள்ள அவருக்கு 15 நிமிடங்கள் ஆயிற்று. பெயரைப் புரிந்து கொள்ளா ததற்காக அவர் மீது நான் குற்றம் சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இருப்பது தமிழ்நாட்டில். அதைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் தில்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துக் தந்தார்களே, அவர்கள் தான் குற்றவாளிகள். “இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவிதமான சிறு விஷயங்களிலும் அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பதன் விளைவு, பெரிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய் விடும் என் பதால் தான் அதிகாரங்கள் தில்லியில் குவிக்கப்படக்கூடாது என்கிறோம், “ஆகவே வலுவான மத்திய அரசு தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடி யும் என்பது தவறு. மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களேயானால் அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கிப் பாதுகாப்புப் போன்ற பெரிய விஷயங்களில் கூடச் சோடை போய்விடுவார்களோ” என்பதுதான் என் சந்தேகம்.
“மேல் அதிகாரம் அனைத்தும் தில்லியில் இருப்பதை மாற்றிடத் தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தி ருக்கிறது. மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர அரசி யல் கட்சிக் கோரிக்கை அல்ல.” இது அண்ணா பேசியது, அதே மாநாட்டில் திரு.கல்யாண சுந்தரம் பேசியிருக்கிறார்கள். “மத்திய அரசை எதிர்த்து மாநில சுயாட்சிக்காக நடக்கும் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கின் றோம்” என்று பேசியிருக்கிறார்கள். “இது முரசொலியில் தானே வந்தது? இங்கே சொல்லா விட்டாலும் நாளை க்குப் போய்க் சொல்லக்கூடும். அதற்காகத் தான் நான். ‘இந்து’ பத்திரிகையின் ஃபோட்டோஸ்டெட்’ காப்பி எடுத்து வந்துள்ளேன். “C.M.wants effective State Autonomy” என்கின்ற தலைப்பில் அண்ணா வும், நம்பூதிரிப்பாத்தும் பேசிய பேச்சு அந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது. அதைப் போலவே ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்’ ஜூலை 21, 1968 இதழில். ’Annadurai wants panel to consider State Autonomy’ என்கின்ற அந்தச் செய்திகள் எல்லாம் அப்போதே பத்திரிகைகளில் வந்திருக் கின்றன.
நன்றி: தமிழரசு ஏடு
ஜோதிபாசு - மறைந்த முன்னாள் முதல்வர், மேற்கு வங்கம்
மத்திய - மாநில உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து பிரச்சா ரம் செய்து வந்தோம். இந்த நெருக்க டியின் விளைவாகவே திருமதி. காந்தி யின் அரசாங்கம் 1983 ஜுன் 9இல் சர்க்காரியா கமிஷனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உண் மையான கூட்டாட்சியினை அமைப்ப தற்காக மாநிலங்களின் அதிகாரங் கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறிடும் வகையில் 11 அம்சங்களைக் கொண்ட கருத்துரை ஒன்றை இ.எம்.எஸ்.வெளியிட்டார். அந்த நேரத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மற்றும் 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற ஸ்ரீநகர் மாநாடு நாடு முழுவதின் கவனத்தைக் கவர்ந்தது. 1982 அக்டோபர் 5 முதல் அக்டோபர் 9 வரை காஷ்மீர் முதல் அமைச்சரின் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
பின்னாளில் பிரதமராகப் பொறுப் பேற்ற ஐ.கே.குஜ்ரால் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதே பெயரில் பின்னாளில் உரு வான முன்னணியுடன் இதைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இக்கூட்டத்திற்கு டாக்டர் அசோக் மித்ராவும் நானும் சென்றிருந்தோம். ஆந்திரப்பிரதேசத்தின் சார்பில் என்.டி.ராமராவ், திரிபுரா சார்பில் நிருபன் சக்ரவர்த்தி கர்நாடகா முதல்வர் ராம கிருஷ்ண ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இ.எம்.எஸ்., சிபிஐ சார்பில் ராஜேஸ்வரராவ், ஜனதா கட்சி சார்பில் சந்திரசேகர், பிஜூ பட்நாயக், எச்.என்.பகுகுணா, காங்கி ரஸ் (எஸ்) சார்பில் சரத்பவார், அகாலி தள் சார்பில் ஹர்சந்த் சிங் லோங்கோவால், ஜனவாதி கட்சி சார்பில் சந்திரஜித் யாதவ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஜம்மு-காஷ்மீர் முதல்வரான டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் முன் முயற்சியில் தான் இக்கூட்டம் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பாஜக, லோக்தள் ஆகிய கட்சிகள் பங்கேற்க வில்லை. முதல் நாளன்றே நான் பேசி னேன். ஆளுநரின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தெளிவாக விளக்கிய கருத்துரை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் கூறியதாவது: “ஆளுநர்கள் தங்களது சொந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவது, குடியரசுத் தலை வரின் ஆட்சியை அமைப்பது ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ற வகையி லேயே நடந்து கொள்கிறார்கள் என்பதை சமீபத்திய வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலத்திலிருந்து அனுப்பப்படும் பட்டியலிலிருந்தே குடியரசுத் தலைவர் ஆளுநர்களை நியமிப்பது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். அரசியல் அமைப்புச் சட்ட ரீதியாக சிக்கலேதும் ஏற்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படுமானால் அரசியல மைப்புச் சட்டத்தின் 263ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் மாநி லங்கள் இணைமன்றத்துடன் ஆலோ சனை நடத்தலாம். இந்த கவுன்சிலின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட வேண்டும். பல்வேறு உமாநிலங்களிலும் நிலவு கின்ற பொருளாதார அசமத்துவம் என்பது அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதன் விளைவாகவே ஏற்பட்டதாகும். ஒரு சில மாநிலங்களைப் பொறுத்த வரை மத்திய அரசு மிகுந்த பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது”. இந்தக் கருத்துரையானது பல்வேறு தீர்வுகளையும் பரிந்துரைத்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 268 மற்றும் 269 ஆவது பிரிவுகளை முறையாகப் பயன்படுத்துவது, ஒரு சில நிதி சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவையும் இவற்றில் உள்ளடங்கி யிருந்தன.
ஸ்ரீநகரில் விட்ட இடத்திலிருந்து கல்கத்தாவில் தொடர்ந்தோம். கல்கத்தாவில் கிரேட் ஈஸ்டர்ன் ஓட்டலில் 1983 ஜனவரி 13 முதல் 15 வரை இக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் சார்பில் நானும் டாக்டர் மித்ராவும் கலந்து கொண்டோம். மேலும் நான்கு முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். மேலும், இஎம்எஸ், ஐ.கே.குஜ்ரால், சந்திர சேகர், சரத்பவார், பிஜூபட்நாயக், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, ராம் விலாஸ் பஸ்வான், மு.கருணாநிதி, சந்திரஜித் யாதவ், தாரகேஸ்வரி சின்ஹா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொருளாதார நிலைமை குறித்த தீர்மானம் ஒன்றை இம்மாநாடு நிறை வேற்றியது மட்டுமின்றி காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளையும் கண்டித்து ஒரு கருத்துரை முன்வைக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதியன்று பிரிகேட் பேரெட் மைதானத்தில் மிகப்பெரும் பேரணி ஒன்றும் நடைபெற்றது. முதல் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோரிடையேயான கலந்துரையாடலுடன் இதை நிறுத்தி விட நாங்கள் விரும்பாததால் தான் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தி ருந்தோம்.
நன்றி: அணையாஜோதி
(ஜோதிபாசுவின் சுயசரிதை)