உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு
முதலமைச்சர் பெருமிதம் சென்னை, செப்.13- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத் தில், சனிக்கிழமை (செப். 13) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந் தார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற் குள் தீர்வு காணப்படுவதை கண்காணித் திடவும் துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, இதுவரை நடை பெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் களில் அரசின் 15 துறைகளில் பட்டிய லிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. தீர்வு செய்யப்பட்ட மனுக் களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வு செய்யப்பட்ட மனுக்களில் 83 விழுக் காடு ஆகும் என்று முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணப் பட வேண்டும் என்றும், குறிப்பாக, வரு வாய்த் துறை, கூட்டுறவுத் துறை, ஆதி திராவிடர் நலத்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கியத் துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத் திட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வா கத் துறையில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வேளாண்மைத் துறையில், விவசாய பெருமக்களின் தேவை களான இடுபொருட்கள், விவசாய இயந்திரங்கள் தொடர்பான மனுக்க ளின் மீது அதிக கவனம் செலுத்தி, விவசாய பெருமக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா சம்பந்தமான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதேபோன்று, மாற்றுத்திறனாளி களின் கோரிக்கைகளை கனிவுடன் பரி சீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடித்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மக்கள் அளிக்கும் அனைத்து மனுக் கள் மீதும் விடுதலின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற் காக அனைத்து அரசு துறைச் செயலா ளர்களிடமும், மாவட்ட ஆட்சியர்களிட மும் தலைமைச் செயலாளர் தொடர்ச்சி யாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்க ளின் மனுக்களுக்கு தீர்வு காணப்படு வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு அலுவலர் பெ. அமுதா, நிதித்துறை முதன்மைச் செய லாளர் த.உதயச்சந்திரன், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.