சென்னை, பிப்.14- தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023–ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (பிப்.14) வெளி யிட்டார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பின் விவரம் வருமாறு: மின்வாகன உற்பத்தித்துறை யில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முத லீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும். இது ஐந்து வரு டங்கள் நடைமுறையில் இருக் கும்.
சிறப்பம்சங்கள்
பொது போக்குவரத்து திட் டங்களை மின்மயமாக்குதல் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக பிரத் யேகமாக மின் வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி திரும்ப வழங்குதல், மூலதன மானியம், விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதி யியல் சலுகை என பல்வேறு வகைப் பட்ட முதலீட்டு சலுகைகளில் ஏதே னும் ஒன்று மற்றும் பிற சலுகை களும் பெற வாய்ப்புகள். சிறப்பு ஊக்கச் சலுகைகள், மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிப்பு செய்தல். மின் ஆட்டோக்களுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழி காட்டுதல்கள் மற்றும் வாகனங்க ளுக்கு வர்த்தக அனுமதிப் பத்தி ரங்களை வழங்குதல், மின் வாகன மின்னேற்றுதலுக்கான கட்ட ணங்களில் திருத்தம் மேற்கொள் ளுதல் மற்றும் மின்னேற்று நிலை யங்களை அமைப்பதற்கான மூல தன மானியம் வழங்குதல். திறன் மேம்பாடு, புதிய கட்ட டங்கள், ஏற்கனவே உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், குடியிருப்பு நகரியங்கள் ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட மின்சார வாகன மின்னேற்று உள் கட்டமைப்புக்கான மாதிரி கட்டட விதிகள் 2016-க்கு ஏற்ப தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் மேற் கொள்ளுதல். மின் வாகனச் சூழலமைப் பினை மேம்படுத்தும் வகையில், மின் வாகன தொழிற் பூங்காக் கள் அமைத்தல் மற்றும் விற்ப னையாளர் சூழலமைப்பு உரு வாக்குதல், பிரத்யேகமாக மின் வாகன இணையதளம் உரு வாக்குதல் மற்றும் வழிகாட்டி நிறு வனத்தில் மின்வாகன ஆதரவுச் சேவை பிரிவு உருவாக்குதல்.
மின்வாகன நகரங்கள்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தலை மைச் செயலாளர் தலைமை யில், முக்கியத் துறைகளின் செய லாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மின் வாகன வழிகாட்டு தல் குழுவை மாற்றி அமைத்து, இக்கொள்கையை நடைமுறைப் படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சி கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.