திருச்சிராப்பள்ளி, அக்.17 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டு காலமாக அடிமனை பிரச்ச னை இருந்து வருகிறது. இந்நிலை யில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திரு முத்தம் கிராமத்தில், புதிய பெயரில் பத்திரங்கள் பதியக் கூடாது என ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங் கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலு வலகத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வா கம் தலையிட்டு மேற்கண்ட பணி களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்ப தற்கும், வங்கியில் வைத்து கடன் பெறு வதற்கும் அல்லது உயில் எழுதவோ, பழைய வீடுகளை இடித்து புன ரமைப்பு செய்வதற்கோ முடியாமல் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, வேட்பாளர்கள் ஸ்ரீரங்கம் அடிமை பிரச்சனையை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தீர்த்து விடுவோம் என வாக்குறுதிகளை கொடுத்துச் செல்கின்றனர். ஆனால் இன்று வரை அடிமனை பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு
எனவே ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அடி மனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்ச னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுடன் இணைந்து திங்களன்று ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீ சார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றனர். இதை யடுத்து கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் கலந்து கொண்ட சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, கிளை உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக் குழுவினர் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்நிலையில், கைது செய்யப் பட்ட அனைவரும் உணவு உண்ண மறுத்து, மண்டபத்திலேயே உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர்.