கொழும்பு, நவ.16- இலங்கையின் புதிய பிர தமரும், அமைச்சரவையும் திங்கட்கிழமையன்று (நவ.18) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலை மையில் பதவி ஏற்கவுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக் கள் சக்தி (NPP) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுடன் வெற்றி பெற் றுள்ளது. இதனையடுத்து பிர தமர் மற்றும் புதிய அமைச் சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சனிக் கிழமையன்று கொழும்பு வில் நடைபெற்றது. இதில் பேசிய ஜேவிபி கட்சியின் பொதுச்செயலா ளர் டில்வின் சில்வா, புதிய அமைச்சரவை திங்கக் கிழமை பதவி ஏற்கும் என தெரிவித்தார். அமைச்ச ரவை எண்ணிக்கை குறித்து பேசிய அவர், அமைச்சரவை யில் அதிகபட்சம் 25 பேரை மட்டுமே நியமிக்கும் திட்டம் உள்ளதாகவும், இந்த எண் ணிக்கை 25-க்கும் குறைவாக 23 அல்லது 24 என்று கூட இருக்கலாம் என குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள சூழ லில் அதிக அமைச்சர்களை நியமிப்பது மக்களின் வரிப் பணத்தை அதிகமாக செலவு செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், அமைச்சர்களுக் கான துறை ஒதுக்கீட்டில், அறிவியல்பூர்வமான நடை முறை கடைப்பிடிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தேவையை பொறு த்து கூடுதல் துணை அமைச் சர்களின் எண்ணிக்கை இருக் கும் எனவும் கூறினார். இலங்கை அரசியல மைப்பின் 46-ஆவது சரத் தின்படி, அனுமதிக்கப்பட்ட அமைச்சரவையின் எண் ணிக்கை 30 ஆகும். துணை அமைச்சர்களின் எண் ணிக்கை 40-ஐ தாண்டக் கூடாது. எனினும், செலவி னங்களைக் குறைக்கும் நோக் கில் சிறிய அமைச்சரவையே அமைக்கப்படும் என என்பிபி உறுதி அளித்துள்ளது.